திருச்சி - இலங்கைக்கு கூடுதல் விமான சேவை தொடக்கம்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு கூடுதல் விமான சேவையை ஸ்ரீலங்கன் விமான நிறுவன திருச்சி நிலைய மேலாளா், அதிகாரிகள் இன்று தொடங்கி வைத்தனர்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு கூடுதல் விமான சேவையை ஸ்ரீலங்கன் விமான நிறுவன திருச்சி நிலைய மேலாளா், அதிகாரிகள் இன்று தொடங்கி வைத்தனர்.

author-image
WebDesk
New Update
airways service

திருச்சி - இலங்கை கூடுதல் விமான சேவை துவக்கம்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு கூடுதல் விமான சேவையை  ஸ்ரீலங்கன் விமான நிறுவன அதிகாரிகள் இன்று தொடங்கி வைத்தனர். 

Advertisment

திருச்சி-இலங்கை இடையே கூடுதல் விமானச் சேவையை ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தொடங்கியது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் இலங்கை தவிர மற்ற நாடுகளுக்கு தினசரி 1 முதல் 4 சேவைகள் இயக்கப்படுகிறது. 

ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் இலங்கைக்கு தினசரி 1 என்ற வகையில் வாரந்தோறும் 7 சேவைகளை மட்டுமே இயக்கி வந்தது. அதன்படி செவ்வாய், புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு இலங்கையிலிருந்து திருச்சி வரும் விமானம் மீண்டும் 10.10-க்கு இலங்கை செல்லும்.

இதுபோல திங்கள்,வியாழன்,வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 3.05 மணிக்கு இலங்கையிலிருந்து திருச்சி வரும் விமானம் 4.10-க்கு புறப்பட்டு மீண்டும் இலங்கை சென்றுக்கொண்டிருந்தது. 

Advertisment
Advertisements

இந்நிலையில் வியாழக்கிழமைகளில் காலையும் இலங்கைக்கு கூடுதல் விமானச் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக திருச்சியில் நடந்த விழாவில் ஸ்ரீலங்கன் விமான நிறுவன திருச்சி நிலைய மேலாளா் அஜாஸ் உள்ளிட்டோா் கூடுதல் சேவையைத் தொடங்கி வைத்தனா்.

Airlines Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: