சேகர் ரெட்டி மகளுடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட மணமகன் மரணம்

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வருங்கால மருமகனாக வரவிருந்த சந்திரமவுலிக்கு தீடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வருங்கால மருமகனாக வரவிருந்த சந்திரமவுலிக்கு தீடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சேகர் ரெட்டி மகளுடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட மணமகன் மரணம்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில ஆலோசனைக்குழு தலைவரும், தொழில் அதிபராகவும் இருப்பவர் சேகர் ரெட்டி. இவரது மகளுக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியாக உள்ள தர்மா ரெட்டியின் மகன் சந்திரமவுலிக்கும் (வயது 27) சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

Advertisment

இருவருக்கும் வருகிற ஜனவரி 26-ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்தை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் நடத்தி வைப்பதாகவும் இருந்தது. மாப்பிள்ளை சந்திரமவுலி திருமண அழைப்பிதழை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று கொடுத்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 18-ம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து, கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட சந்திரமவுலி இன்று (டிசம்பர் 21) காலை 8.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. சந்திரமவுலி மரணம் இருவீட்டார் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: