/indian-express-tamil/media/media_files/ia8nRbHlkNxJXKA9iM4r.jpg)
திடீர் நெஞ்சுவலி காரணமாக அ.மு.மு.க பொது செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர் டி.டி.வி.தினகரன். இந்நிலையில், திடீர் நெஞ்சுவலி காரணமாக அ.மு.மு.க பொது செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டி.டி.வி.தினகரனுக்கு நேற்று இரவு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும், டி.டி.வி.தினகரன் தரப்பில், வழக்கமான பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அ.மு.மு.க கட்சியினர் மத்தியில் கலக்கம் நிலவி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.