அன்னிய செலாவணி மோசடி வழக்கில் விசாரணைக்கு டி.டி.வி. தினகரன் எழும்பூர் பொருளாதார நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
கடந்த 1996-97 ம் ஆண்டில் டி.டி.வி தினகரன் சிங்கப்பூரில் பேனியன் டிரீ, டர்க்கி என்ற நிறுவனங்களுக்கு 36.36 லட்சம் அமெரிக்க டாலரையும், 1 லட்சம் பவுண்ட் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கப் பிரிவு டி.டி.வி தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்மதி முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குறுக்கு விசாரணைக்கு தினகரன் தரப்பு ஒத்துழைப்பு தராததால் தினகரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி டி.டி.வி.தினகரன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது இந்த வழக்கில் கடைசி சாட்சியான அமலாக்கதுறை முன்னாள் அதிகாரி ஜானகிராமனிடம் குறுக்கு விசாரணை செய்ய தினகரன் தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கேட்டார். அதற்கு நீதிபதி 4 மாதங்களாக குறுக்கு விசாரணை செய்யாமல் காலதாமதம் செய்வதால் தான் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தினகரனை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டதாகவும், தினகரன் ஆஜராகியும் அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது என மறுப்பு தெரிவித்தார். அதன் பின் ஜானகி ராமனிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அடுத்த கட்ட விசாரணைக்காக வழக்கு ஏபரல் 11 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Ttv dhinakaran case in chennai high court
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூட்டணிக் கட்சிகளை நிர்பந்திக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
குக்கரும் வேணாம்… வடிக்கவும் வேணாம்: பேச்சிலர்கள் இப்படி சாதம் செய்து பாருங்க!
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு : உங்கள் பெயரை சரிபார்க்க வேண்டுமா?
அட! நம்ம சசிகுமாரா இது? சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் மாஸ் லுக்
ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!