/indian-express-tamil/media/media_files/2025/09/19/ttv-dhinakaran-press-meet-2025-09-19-06-53-35.jpg)
"அண்ணாமலையும் நானும் 9-ம் தேதி டெல்லிக்கு செல்வதாக இருந்தது. ஆனால், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் காரணமாக அது தள்ளிப்போனது. டிசம்பர் மாதம் மகிழ்ச்சியான செய்தி வரும்.” என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “எனக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் தனிப்பட்ட முறையில் எந்தப் பகையும் இல்லை. பா.ஜ.க-வின் பாதுகாப்பில்தான் பழனிசாமி இருந்தார், பழனிசாமியை நாங்கள் முதல்வராக்கினோம்; அ.தி.மு.க-வில் நீக்கப்பட்டிருந்த 10 ஆண்டுகளில் நான் யாருடனும் தொடர்பில் இல்லை.
பழனிசாமி முகம் வாடியுள்ளது, அவரை விட்டுவிடுங்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு அப்போது இல்லை; சசிகலா கூறியதால் தேர்தலில் போட்டியிட்டேன்.
அண்ணாமலை என்னுடைய நல்ல நண்பர். நாங்கள் இரண்டு பேரும் அரசியலில் பழகியிருந்தாலும்கூட, இரண்டு பேரின் குணாதிசயங்கள் ஒத்துப்போகும். அண்ணாமலை யதார்த்தத்தையும், உண்மையையும் பேசக்கூடியவர். அவர் என்னிடம் அரசியல்வாதியாகவே பழகியதில்லை. நானும் அப்படித்தான்.
கூட்டணியிலிருந்து விலகிய முடிவை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என அண்ணாமலை தொடர்ச்சியாக என்னிடம் வலியுறுத்தினார். அண்ணாமலையும் நானும் 9-ம் தேதி டெல்லிக்கு செல்வதாக இருந்தது. ஆனால், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் காரணமாக அது தள்ளிப்போனது. டிசம்பர் மாதம் மகிழ்ச்சியான செய்தி வரும்.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.