கொள்ளிக் கட்டையை தலையில் வைத்தது போல செயல்படும் இ.பி.எஸ்: டி.டி.வி தினகரன் கடும் விமர்சனம்

"அ.தி.மு.க.விற்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் செங்கோட்டையன் ஈடுபடவில்லை. முதலமைச்சராக்கிய சசிகலாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கிய துரோகி எடப்பாடி பழனிசாமி"என்று டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார்.

"அ.தி.மு.க.விற்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் செங்கோட்டையன் ஈடுபடவில்லை. முதலமைச்சராக்கிய சசிகலாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கிய துரோகி எடப்பாடி பழனிசாமி"என்று டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
TTV Dhinakaran slams AIADMK Chief Edappadi Palaniswami for removing KA Sengottaiyan Madurai press meet  Tamil News

"செங்கோட்டையனை தகுதியே இல்லாத எடப்பாடி பழனிசாமி நீக்கியது கொள்ளிக்கட்டையால் தலையை சொறிவதற்கு சமம்." என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "அ.தி.மு.க-வில் கொங்கு மண்டலத்தில் முக்கிய பங்கு வகித்தவர் செங்கோட்டையன். அவர் ஏழு மாவட்டங்களின் செயலாளர்களுடன் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கையுடன் இருந்தவர். 

Advertisment

செங்கோட்டையன் கட்சிக்கு விசுவாசமானவர். கிளைச் செயலாளராக இருந்து அமைச்சராக உயர்ந்தவர். அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு வருந்த மாட்டார். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்திலும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் பசும்பொன் நினைவிடத்திற்கு தொடர்ந்து வருகை தந்தவர் செங்கோட்டையன். 

இப்போது அவர் அரசியலுக்காக அல்ல, மரியாதைக்காக பசும்பொன் நினைவிடத்திற்கு வந்துள்ளார். அதை எடப்பாடி பழனிசாமி தவறாக புரிந்து கொண்டு தேவையில்லாமல் நடவடிக்கை எடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது விலாச புத்தி, விபரீத காலம் வந்து விட்டது போல உள்ளது. அவரின் அரசியல் அழிவை அவர் தானே உருவாக்கிக்கொண்டு வருகிறார். நாங்கள் அவரை வீழ்த்த வேண்டியதில்லை; அவர் தானாகவே வீழ்வார். 

அ.தி.மு.க.விற்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் செங்கோட்டையன் ஈடுபடவில்லை. முதலமைச்சராக்கிய சசிகலாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கிய துரோகி எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையனை தகுதியே இல்லாத எடப்பாடி பழனிசாமி நீக்கியது கொள்ளிக்கட்டையால் தலையை சொறிவதற்கு சமம். அவர் கொள்ளிக்கட்டையை தலையில் வைத்துக்கொண்டது போல செயல்படுகிறார். ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் என்னைப் பார்த்து துரோகி என எடப்பாடி பழனிசாமி பேசுவது சிரிப்பாக உள்ளது. யாரையும் துரோகி என சொல்லுவதற்கு கூட எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியே இல்லை.

Advertisment
Advertisements

செங்கோட்டையன் சொன்னதுபோல துரோகத்திற்கு நோபல் பரிசு பெறும் தகுதி இ.பி.எஸ்.-க்கு தான் உள்ளது. அ.தி.மு.கவிலிருந்து செங்கோட்டையனை நீக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை. அவர் அழிவை தேடிக்கொள்கிறார். தகுதியில்லாத எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகியான செங்கோட்டையனை நீக்குவதா?" எனக் கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சித்துள்ளார். 

Ttv Dhinakaran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: