/tamil-ie/media/media_files/uploads/2022/08/TTV-Dhinakaran-3.jpg)
TTV தினகரன்
ஜெயலலிதா தனது நினைவு நாளில் எடப்பாடி யார் என்பது வெளிப்பட்டுவிட்டது என டிடிவி தினகரன் கூறினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாள் டிச.5ஆம் தேதியான நேற்று அனுசரிக்கப்பட்டது. அப்போது ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதையடுத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. அப்போது, “அம்மா மறைந்த நன்நாளில்” என எடப்பாடி வாசித்துவிட்டார்.
இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த டிடிவி தினகரன், “எடப்பாடியின் மனநிலை வெளிப்பட்டு உள்ளது.
அந்த காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. எனக்கும் வந்தது. அதைப் பார்க்கும்போது தர்மசங்கடமாக இருந்தது” என்றார்.
மேலும் அதிமுகவின் தலைவர் கதாநாயகன் எல்லாம் இரட்டை இலைதான் என்றார். இதையடுத்து செய்தியாளர்கள் அவரிடம் அதிமுக அமமுக கூட்டணி குறித்து பேசியிருந்தீர்களே எனக் கேள்வியெழுப்பினர்.
இதற்கு, “திமுகவை எதிர்க்க வலுவான கூட்டணி தேவை. நமக்கு பிரதமர் வேட்பாளரும் தேவை. இதற்காக கூட்டணி அவசியமாகிறது” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.