தூத்துக்குடியில் அமையவுள்ள கப்பல் கட்டும் தளம்; தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் புதியதொரு அடித்தளம் - ஸ்டாலின்

தூத்துக்குடியில் ரூ. 30,000 கோடி முதலீட்டில் இரண்டு புதிய கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தூத்துக்குடியில் ரூ. 30,000 கோடி முதலீட்டில் இரண்டு புதிய கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

author-image
WebDesk
New Update
stalin

தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதியதோர் அடித்தளமாக கப்பல் கட்டும் தளங்கள் அமையும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் அமையவுள்ள இரண்டு கப்பல் கட்டும் தளங்கள், ரூ.30,000 கோடி முதலீட்டில் 55,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம், இரண்டு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

Advertisment

இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு பெரிய வணிக கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், "சங்கப் பாடல்கள் சொல்லும் தமிழரின் பெருமைமிகு கப்பற்கலையின் வரலாற்றை, இந்த புதிய திட்டங்கள் மீட்டெடுக்கும். இந்த கப்பல் கட்டும் தளங்கள் தென் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பெரும் உந்துசக்தியாக அமையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ரூ. 30,000 கோடி முதலீட்டில் இந்த திட்டத்தின் மூலம் நேரடியாக 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன. தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். மேலும் இப்பகுதியின் பொருளாதார நிலை மேம்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சங்க காலத்தில் தமிழர்களின் கப்பற்கலை சிறப்பு மீண்டும் உலக வரைபடத்தில் இடம்பிடிக்கும்.சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் கப்பல் கட்டுதல் மற்றும் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியதை இந்த புதிய திட்டங்கள் நினைவுபடுத்துகின்றன.

தென் தமிழகத்தின் துறைமுக நகரமான தூத்துக்குடியில் இந்த திட்டங்கள் அமையவிருப்பது, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இப்பகுதியை ஒரு முக்கிய வணிக மையமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு தொடர்ந்து இதுபோன்ற பெரிய தொழில் முதலீடுகளை ஈர்த்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளின் வளர்ச்சிக்கு வழி வகுத்து வருகிறது. இந்த கப்பல் கட்டும் தளங்கள், தமிழகத்தின் தொழில் துறைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும் என முதலமைச்சர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார். இதில் முக்கியமானது என்றால் ரூ. 30,000 கோடி முதலீட்டில் இந்த திட்டத்தின் மூலம் நேரடியாக 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements
Tuticorin Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: