/indian-express-tamil/media/media_files/fgtUrGvkB38qQMWWHExP.jpg)
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 10 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனையும் ரூ.3.50 கோடி அபராதமும் விதித்தது.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 10 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனையும் ரூ.3.50 கோடி அபராதமும் விதித்ததைத் தொடர்ந்து, இதற்கு எதிர்ப்பு மீனவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளத்தில் இருந்து 22 மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை சோதனை செய்தனர். சோதனையில் மீனவர்களிடம் அனைத்து ம்ஆவணங்களும் சரியாக இருந்தபோதிலும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 22 மீனவர்களையும், 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து கைது செய்தனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களில் 12 பேருக்கும் ரூ.3.5கோடி அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் விதித்து கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தூத்துக்குடி தருவைக்குளத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 22 மீனவர்களில் 10 பேருக்கு இன்று (செப்டம்பர் 18) தலா ரூ.3.5 கோடி அபராதமும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைக் கண்டித்து இலங்கை நீதிமன்றம் முன் தமிழ்நாடு மீனவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தூத்துக்குடி தருவைக்குளத்து மீனவர்கள் மத்தியில் பெரும் சோகம் நிலவி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.