/tamil-ie/media/media_files/uploads/2023/03/death.jpg)
டி.வி சேனல் டிரைவர் சென்னை பிரஸ் கிளப்பில் மரணம்
சேப்பாக்கம் அருகே உள்ள சென்னை பிரஸ் கிளப்பில் கடந்த திங்கள்கிழமை இரவு 48 வயது நபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் மணிகண்டன் (48) என்றும் செய்தி சேனலில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார் என்றும் தெரியவந்தது.
மணிகண்டன் குடும்பத்துடன் மந்தைவெளி சாளையார் தெருவில் வசித்து வந்தார். திங்கள்கிழமை இரவு, அவர் தனது மனைவிக்கு வாட்ஸ்அப்பில் வீடியோ மெசேஜ் அனுப்பினார். அதில் தனது இந்த விபரீத முடிவுக்கு மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, பிரஸ் கிளப்பிற்கு விரைந்தார். அங்கு மணிகண்டன் சுயநினைவின்றி இருந்ததையடுத்து அவரை அருகில் உள்ள அரசு ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், மணிகண்டன் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.