/indian-express-tamil/media/media_files/2024/10/30/CsFU8GgQp4XntZAv64DK.jpg)
நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து பாசக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில் அவரும் கட்சித் தொடங்கியுள்ளார். எனவே, அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
புஸ்ஸி ஆனந்த் பற்றி நிறைய விஷயங்கள் வருகிறது. அவர் புதுச்சேரியில் உள்ள பாஜக தலைவருடன் நெருக்கமாக இருப்பதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது. விஜய் தான் ஏ டீம், பி டீம் இல்லை என சொல்வதை வைத்து பார்க்கும் போது சந்தேகம் ஏற்படுகிறது.
திமுக குறித்து பணம் சம்பாதிப்பதாக கூறி இருக்கிறார். புதிதாக கட்சி தொடங்கும் போது இந்த வார்த்தையை அவர் தவிர்த்து இருக்கலாம். புஸ்ஸி ஆனந்த் கிரிமினல் என்று விஜய்யின் தந்தையே சொல்லி இருக்கிறார். எனவே, ஒரு கிரிமனலை எப்படி அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்தார் என்று தெரியவில்லை? ஒருவேளை கிரிமினல் இப்போது நல்லவராக மாறிவிட்டாரா? என்னவோ.
நடிகர் விஜய் வருமானவரித் துறை சோதனையில் சிக்கிய போது, குற்றவாளியை போல் வருமானவரித் துறை காரில் அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு ஆதரவாக திமுக தான் குரல் கொடுத்தது.
ஏற்கெனவே, பாஜகவில் இருந்து ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர முயற்சித்தார்கள். அவர் வரவில்லை என்பதால் அவருக்கு பதிலாக விஜய்யை ஏற்பாடு செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
திமுக அரசு பல நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது.இந்த அரசை எத்தனை விமர்சனங்கள் செய்தாலும் தாங்க கூடிய அரசாக, மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்படும்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.