New Update
/indian-express-tamil/media/media_files/vfxmdoqkk1m8RTnpn9EP.jpg)
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா நாளை நடைபெறுகிறது.
த.வெ.க மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழாவில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார் என பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். கட்சியின் கொடி மற்றும் பாடலை அண்மையில் விஜய் அறிமுகம் செய்தார். இந்நிலையில் த.வெ.க-ன் முதல் அரசியல் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா நாளை (அக்.4) நடைபெற உள்ளது. நாளை காலை 4 மணி முதல் 6 மணிக்குள் பந்தக்கால் நடப்படுகிறது.
இதையடுத்து, பந்தக்கால் நடும் விழாவில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார் என பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார். மாநாடு நடத்த இடம் வழங்கிய நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வுக்குப் பிறகு, மாநாட்டுக்கு பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.