இயல்பை மீறி வெளிவந்த வார்த்தைகள்; இ.பி.எஸ் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா

காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் – இ.பி.எஸ் குறித்த பேச்சுக்கு ஆதவ் அர்ஜூனா வருத்தம் தெரிவித்து பதிவு

காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் – இ.பி.எஸ் குறித்த பேச்சுக்கு ஆதவ் அர்ஜூனா வருத்தம் தெரிவித்து பதிவு

author-image
WebDesk
New Update
aadhav arjuna eps

தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க) தேர்தல் பிரச்சார மேலாண்மைச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்தும் பேசிக்கொண்டே நடந்து செல்லும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த வீடியோவில், ஆதவ் அர்ஜூனா தமிழக அரசியல் கூட்டணி தொடர்பாகப் பேசிய காட்சிகள் இடம்பெற்றன. "அண்ணாமலையாவது 10 பேரை வைத்துக்கொண்டு, தேர்தலில் நின்று 18, 20 சதவீதம் வாக்கு வங்கியை வைத்திருக்கிறார். இங்கே எடப்பாடியை நம்பி கூட்டணிக்கு யாரும் வரும் மாதிரி தெரியவில்லை.  பாரதிய ஜனதா கட்சியே அ.தி.மு.க.,வை கூட்டணியில் இருந்து கழற்றிவிடும்" என்று ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளார். இதற்கு பொதுச்செயலாளர் ஆனந்த் எந்தப் பதிலும் கூறாமல் சிரித்துக்கொண்டே செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது. இந்தநிலையில், வீடியோ குறித்து ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்தார்.

Advertisment
Advertisements

இதுதொடர்பாக ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது;

எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும். 

என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது. 

உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன். தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தவகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு…

Edappadi Palanisamy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: