/indian-express-tamil/media/media_files/2025/06/22/tvk-organ-donate-2025-06-22-13-00-16.jpg)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது பிறந்தநாளை இன்று (ஜூன் 22) கொண்டாடி வருகிறார். கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விபத்தில் பலர் உயிரிழந்த நிலையில், யாரும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி கடந்த ஆண்டு பெரிய அளவில் அவரது கட்சியினர் பிறந்தநாளை கொண்டாடாத நிலையில், இந்த ஆண்டு வெகு விமரிசையாக விஜய் பிறந்தநாளை கொண்டாடி வரும் த.வெ.க.வினர் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் த.வெ.க. செயலாளர் பாபு தலைமையில், கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த 15 பெண் நிர்வாகிகள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் உடல் உறுப்பு தானம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுடைய மறைவுக்கு பின்னர் தங்களது உடல் உறுப்புகள் பிறர் உயிர் வாழ பயன்படும் வகையில் தானமாக வழங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.மேலும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்வதற்காக அவர்களுக்கு தேவையான ஊதுபத்தி, பேனா, மிட்டாய் வகைகளையும் த.வெ.க.வினர் வழங்கினர்.
இதேபோல், கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விஜய்யின் படம் பொறித்த கவரில் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது. இந்த கடலை மிட்டாய் கவர் அரியலூர் மாவட்டத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு, கோவைக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
செய்தி - பி. ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.