/indian-express-tamil/media/media_files/2025/08/22/trichy-tvk-dmk-2025-08-22-22-00-51.jpeg)
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி 90க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.,வில் திருவெறும்பூர் பகுதி கழகம் 39 (அ) வது வட்டத்தை சேர்ந்த தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சியிருந்து விலகி சுமார் 90க்கும் மேற்பட்ட இளைஞர்கள், 39 வது வட்டக் கழக செயலாளர் வினோத் கனகராஜ் ஏற்பாட்டில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தங்களை தி.மு.க.,வில் இன்று இணைத்துக் கொண்டனர்.
மேலும், கட்சியில் இணைந்த அனைத்து இளைஞர்களுக்கும் பொன்னாடை அணிவித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வரவேற்றார்.
இந்நிகழ்வில் மாநகர செயலாளர் மதிவாணன், காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம், பகுதி செயலாளர் சிவகுமார் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.