"ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வந்தால், இந்த நிலை தான் ஏற்படும்": கமல்ஹாசனுக்கு த.வெ.க பதிலடி

ஓய்வு பெறும் காலத்தில் அரசியலுக்கு வந்ததால் தான் கமல்ஹாசனுக்கு இந்த நிலை ஏற்பட்டது என தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Kamal and Vijay

ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்ற நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனின் கூற்றுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, த.வெ.க இணை செய்தி தொடர்பாளர் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

முன்னதாக, நேற்றைய தினம் (பிப் 21) மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது, "சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்பதை என் அனுபவத்தில் நான் புரிந்து கொண்டேன்" என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

கமல்ஹாசனின் இந்த கருத்து அரசியல் களத்தில் பேசுபொருளானது குறிப்பாக, விஜய்யின் அரசியல் வருகையை விமர்சிக்கும் விதமாக கமல்ஹாசன் இவ்வாறு பேசியதாகவும் சிலர் கூறினர். இந்த சூழலில் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் இணை செய்தி தொடர்பாளர் ரமேஷ் தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார்.

அந்த வகையில், "எம்.ஜி.ஆரை போன்று ரசிகர்களை வாக்காளர்களாக மாற்றி விஜய் வெற்றி பெறுவார். ஊழல் கூடாரத்துக்கு எதிராக வீர வசனம் பேசிய கமல், இன்று அதே கூடாரத்தில் சுயநலனுக்காக இருக்கிறார்

Advertisment
Advertisements

ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வந்துவிட்டு, பிக் பாஸ் பணிகளை செய்து வந்தால் கமலுக்கு இந்த நிலைமைதான் ஏற்படும். எம்.ஜி.ஆர் வெற்றியை சிவாஜியால் பெற முடியவில்லை. எம்.ஜி.ஆர் போன்று ரசிகர்களை வாக்காளர்களாக விஜய் மாற்றுவார்" என ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Kamal Haasan Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: