/indian-express-tamil/media/media_files/2025/08/21/tvk-vijay-2025-08-21-15-49-21.jpg)
தமிழக தலைவர் விஜய் தனது பிரச்சாரத்தின் போது மின்தடை திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார். ஆனால், அவரது கட்சி நிர்வாகியே மின்தடை கோரி மின்வாரியத்திற்கு மனு அளித்திருந்தது அம்பலமாகியுள்ளது. நாகையில் தனது பிரச்சாரத்தின் போது பேசிய விஜய், தனது பரப்புரைக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக புகார் தெரிவித்தார். மேலும், நாகையில் தனது பரப்புரையை ஒட்டி திட்டமிட்டு மின்தடை ஏற்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். பிற அரசியல் தலைவர்களின் பரப்புரைகளுக்கு இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், விஜய் உண்மைக்கு மாறாக பேசியது அம்பலமாகி உள்ளது. தவெக நாகை மாவட்ட தலைவர் சுகுமார் என்பவர் மின்வாரியத்திற்கு அளித்த மனுவில், தங்கள் கட்சி தலைவர் வருகையை ஒட்டி குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவரது கோரிக்கையின் அடிப்படையிலேயே, உயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் வழியில் விஜயின் பேருந்துக்கு பாதிப்பு இல்லாத வகையிலும், தொண்டர்கள் மின் கம்பங்களில் ஏறினால் அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாகையில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது பரப்புரையின்போது திட்டமிட்டு மின்தடை ஏற்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டினார். தனது பரப்புரைக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் அவர் புகார் தெரிவித்தார். "ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவர் இங்க வராருன்னு வச்சுக்கோங்க... இல்ல நம்ம பிரதமர் மோடிஜி அவர்களோ இல்ல உள்துறை அமைச்சரோ இங்க வராருன்னு வச்சுக்கங்க... இந்த மாதிரி கண்டிஷன்ஸ் எல்லாம் போடுவீங்க... இந்த மாதிரி பவர் கட் பண்ணுவீங்க... இந்த மாதிரி வயர் கட் பண்ணுவீங்க... கொஞ்சம் கட் பண்ணிதான் பாருங்களேன் முடியாதுல்ல" என்று அவர் சவால் விடுத்தார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நாகை மாவட்டத் தலைவர் சுகுமார் என்பவர், மின்வாரியத்திற்கு அளித்த மனுவில், தங்கள் கட்சித் தலைவர் வருகையை ஒட்டி குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்த தகவல் வெளியாகியுள்ளது. அவரது கோரிக்கையின் அடிப்படையிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைவர் விஜய் தனது பிரச்சாரத்தின் போது மின்தடை திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார். ஆனால், அவரது கட்சி நிர்வாகியே மின்தடை கோரி மின்வாரியத்திற்கு மனு அளித்திருந்தது அம்பலமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.