விஜயின் 'ஒய்' பிரிவு பாதுகாப்பில் மாற்றமில்லை: உள்துறை அமைச்சகம் விளக்கம்

த.வெ.க தலைவர் விஜய்க்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், விஜயின் 'ஒய்' பிரிவு பாதுகாப்பில் மாற்றமில்லை என்று உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

த.வெ.க தலைவர் விஜய்க்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், விஜயின் 'ஒய்' பிரிவு பாதுகாப்பில் மாற்றமில்லை என்று உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
TVK Vijay Z Category Security home ministry Tamil News

த.வெ.க தலைவர் விஜய்க்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகிய இருந்தது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். அந்தப் பிரசார கூட்டத்தில் விஜய் பேசியபோது நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட தலைவர்கள், த.வெ.க. பொதுச் செயலர் ஆனந்த், இணைச் செயலர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisment

இந்நிலையில், த.வெ.க. பொதுச் செயலர் ஆனந்த், இணைச் செயலர் நிர்மல்குமார் ஆகியோருக்கு முன்ஜாமின் வழங்க வேண்டி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "அரசியல் காரணங்களுக்காக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. சம்பவத்திற்கும், எனக்கும் தொடர்பில்லை. போலீசார் போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறினர். கூட்டம் நடத்துவதற்கேற்ப பெரிய இடத்தை ஒதுக்குமாறு எஸ்.பி-யிடம் மனு அளித்தோம். ஒதுக்கவில்லை.

கூட்டத்தில் சில குண்டர்கள் நுழைந்தனர். விஜய் பேசியபோது காலணிகளை வீசினர். நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் கூட்டத்தில் நுழைந்ததால் நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தினரை கட்டுப்படுத்த அரசு இயந்திரம் தவறிவிட்டது. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்." என்று த.வெ.க. பொதுச் செயலர் ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது. இருப்பினும், மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். 

இந்நிலையில், ஆனந்த் வழக்கில் கரூரில் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு என கோரப்பட்டநிலையில், அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க த்திய உள்துறை அமைச்சக பரிந்துரை செய்து இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில், த.வெ.க தலைவர் விஜயின் 'ஒய்' பிரிவு பாதுகாப்பில் மாற்றமில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. புலனாய்வு அறிக்கைகள் அடிப்படையில் பெறப்பட்ட பரிந்துரையின் கீழ் அவருக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Advertisment
Advertisements
Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: