/indian-express-tamil/media/media_files/A1FEDSi2bsw86qfXJFTa.jpg)
கோயம்புத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மூன்றாவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்று திடீரென திமுக நிர்வாகிகள் குழுவாக ஒன்றினைந்து அதிமுக கவுன்சிலர்களை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ள வாட்ஸ்அப் குழுவில் அதிமுக கவுன்சிலர்கள் தமிழக அரசு மற்றும் முதல்வர் குறித்து அவதூறு பரப்பியதாக கூறி முற்றுகையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் போராட்டத்தில ஈடுபட்ட அதிமுக வார்டு உறுப்பினர்களை சந்திக்க அதிமுக நிர்வாகிகளுடன் வந்த மேட்டுப்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் உள்ளிட்டோர் நகராட்சி ஆகியோர் அலுவலகத்தை முற்றிகையிட முயன்றனர்.
அவர்களிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் காவல் துறையினர் பேச்சுவர்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் சுமூக முடிவு எட்டபடாததை அடுத்து இரு சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட 8 வார்டு உறுப்பினர்களும் மற்றும் அதிமுக நிர்வாகிகளை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.