/indian-express-tamil/media/media_files/2025/10/24/child-baby-2025-10-24-07-11-55.jpg)
உடனடியாகச் சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். குழந்தையைச் சோதித்த மருத்துவர்கள், பிரணிகாஸ்ரீ ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். Photograph: (Representational image)
சென்னை பூவிருந்தவல்லியை அடுத்த மாங்காடு பகுதியில், வீட்டின் பின்புறம் தேங்கியிருந்த மழைநீரில் தவறி விழுந்ததில், இரண்டரை வயது பெண் குழந்தை ஒன்று வியாழக்கிழமை காலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தக் கோரச் சம்பவம் நடந்துள்ளது.
மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திப்குமார். இவரது மனைவி பிரியதர்ஷினி, அம்பத்தூரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு பிரணிகாஸ்ரீ என்ற இரண்டரை வயது மகள் இருந்தார்.
நேற்று வியாழக்கிழமை மாலை, பிரியதர்ஷினி தனது மகள் பிரணிகாஸ்ரீயுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து பிரியதர்ஷினி எழுந்து பார்த்தபோது, அருகில் மகள் பிரணிகாஸ்ரீ இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாகப் பதறியடித்து வீட்டின் வெளியே வந்து தேடியபோது, அருகில் இருந்த காலி மைதானத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மகள் பிரணிகாஸ்ரீ கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாகச் சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். குழந்தையைச் சோதித்த மருத்துவர்கள், பிரணிகாஸ்ரீ ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
வீட்டில் தாயுடன் தூங்கிய பிரணிகாஸ்ரீ, விளையாடுவதற்காக வீட்டின் வெளியே வந்தபோது, வீட்டின் அருகே தேங்கி இருந்த மழைநீரில் தவறி விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்துத் தகவல் அறிந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான குழந்தையின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகப் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை பிரணிகாஸ்ரீ உயிரிழப்பு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us