scorecardresearch

ரூ.2400 கோடி ஆருத்ரா ஊழல்: 10 மாதம் தலைமறைவாக இருந்த தமிழக பா.ஜ.க பிரமுகர்- பெண் கைது

ரூ.2,400 கோடி முதலீட்டாளர்களை ஏமாற்றிய அவர், 10 மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தார்.

express image
2,400 கோடி ஆருத்ரா மோசடியில் இருவர் கைது

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான தமிழ்நாடு பிஜேபியின் செயல்பாட்டாளர் கே.ஹரிஷ் உட்பட இருவரை, பொருளாதார குற்றப்பிரிவு (EOW) கைது செய்தனர்.

ரூ.2,400 கோடி முதலீட்டாளர்களை ஏமாற்றிய அவர், 10 மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தார்.

அந்த நிறுவனத்தில் கூடுதல் இயக்குநராக இருந்த தொண்டியார்பேட்டையைச் சேர்ந்த ஜே.மாலதியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.210 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதும், தனது உறவினர்கள் பெயரில் 30க்கும் மேற்பட்டோரின் சொத்துக்களை வாங்கியிருப்பதும் தெரியவந்தது.

வேலூர், காட்பாடி மற்றும் திருச்சி கிளைகளின் பாஜக பொறுப்பாளராக மாலதி இருந்தார். தேசிய அளவிலான குத்துச்சண்டை வீரர் என்று கூறப்படுகிற ஹரிஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜூன் 2, 2022 அன்று மாநில பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

செப்டம்பர் 2020 மற்றும் மே 2022 க்கு இடையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் இருந்து பணத்தை நிறுவனம் வசூலித்துள்ளதாகவும், அவர்களின் டெபாசிட்டுகளுக்கு 25% முதல் 30% வரை வட்டி தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

டெபாசிட் செய்தவர்களை ஏமாற்றிவிட்டதால், மக்கள் அந்த நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு, IPC இன் 420 (ஏமாற்றுதல் மற்றும் முறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டங்களைத் தடை செய்தல் (BUDS) சட்டம் மற்றும் தமிழ்நாடு வைப்பாளர்களின் நலன்களைப் பாதுகாத்தல் (TNPID)) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

மொத்தம், 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், பட்டாபிராமன் மற்றும் மேலாளர்கள் – ரஃபிக், அய்யப்பன் மற்றும் இரண்டு முகவர்கள் உட்பட 8 முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், நிறுவனங்களின் பதிவாளர் மற்றும் அவரது கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தைச் சேர்ந்த இந்திய கார்ப்பரேட் சட்ட சேவை அதிகாரிகள் குழு, வெள்ளிக்கிழமையன்று kanakkupillai.com என்ற இணையதளத்தை இயக்கும் தணிக்கை நிறுவனமான (Govche India Private Limited) இன் பதிவு அலுவலகத்தில் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Two arrested for rs 2400 crore arudhra trading scam