கிருஷ்ணகிரி நகர நெடுஞ்சாலையில் நிலை தடுமாறிய லாரி ஒன்று சுங்கச்சாவடி மையம் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாணம் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து ஏற்பட்டபோது அங்கே பொருத்தப்பட்ட சிசிடிவி கேமிராவில் பதிவான வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி நகர நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி பகுதிக்கு வேகமாக வந்த ஒரு கண்டெய்னர் லாரி திடீரென நிலை தடுமாறி சுங்கச்சாவடி மைய பூத் மீது மோதியது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சுங்கச்சாவடி பூத்தை இடித்து இழுத்துச் சென்றது. அப்போது அவ்வழியே வந்த இரு சக்கர வாகனத்தின் மீதும் மோதியது. இந்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த சென்னப்பன் மற்றும் திருமலை நகர் பகுதியைச் சேர்ந்த பரிமளா ஆகிய இவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும், சுங்கச்சாவடி மைய பூத்தில் இருந்த ஊழியர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கர விபத்து அங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் பரவி பார்ப்பவர்களை பதற வைத்த்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து ஏற்படுத்திய லாரி சுங்கச்சாவடி மையம் மீது மோதுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு ஒருவர் குடும்பத்துடன் 4 பேர் இருசக்கர வாகனத்தில் கடந்து செல்கின்றனர். இதனால், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சிவக்குமாரை கைது செய்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.