Advertisment

வீடு புகுந்து மூதாட்டி மீது தாக்குதல்; திமுக மாஜி எம்எல்ஏக்கள் இருவருக்கு சிறை!

மயிலாடுதுறையில் மூதாட்டியை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏக்கள் இருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Vellore jail

திமுக முன்னாள் எம்எல்ஏக்கள் இருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

mayiladuthurai | dmk | மயிலாடுதுறை மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் வீடு புகுந்து தாக்கப்பட்டார். இது தொடர்பாக, திமுக முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் கல்யாணம்,  அவரது மகன் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன்,  மற்றொரு மகன் கடலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகன் ஆகியோர் உட்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை மயிலாடுதுறை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை (ஜனவரி, 12 2024)  தீர்ப்பு வெளியானது.

Advertisment

அப்போது, நீதிபதி, "திமுக முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் கல்யாணம்,  அவரது மகன் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன்,  மற்றொரு மகன் கடலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகன் உள்ளிட்ட ஆறு பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்".

மூதாட்டி தாக்கப்பட்ட வழக்கில் ஆளுங்கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் இருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Dmk Mayiladuthurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment