Advertisment

2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்; ‘முதல்வரின் முகவரி’ திட்ட சிறப்பு அலுவலராக மோகன் நியமனம்

தமிழ்நாடு அரசு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதில், முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக மோகன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Secretariat II

2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு அரசு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதில், முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக மோகன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

Advertisment

தமிழ்நடு அரசு நிர்வாகக் காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பிப்பித்துள்ளார். 

அதில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறை இயக்குநராகப் பணியாற்றி வந்த டி. மோகன், முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ், கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், அவருக்கு பதிலாக ஐ.ஏ.எஸ் அதிகாரி மோகன் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். 

திருச்சி மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த வைத்திநாதன் ஐ.ஏ.எஸ் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment