Advertisment

இரட்டை சிலை சின்னம் வழக்கு : ஓபிஎஸ் - இபிஎஸ்க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா மனு!

சசிகலா சார்பாக வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இரட்டை சிலை சின்னம் வழக்கு

இரட்டை சிலை சின்னம் வழக்கு

இரட்டை சிலை சின்னம் வழக்கு : ஓபிஎஸ், இபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு இரட்டை இல்லை சின்னத்திற்கு ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு மற்றும் சசிகலா தரப்பினர் போட்டிப்போட்டுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

இருப்பினும் இரட்டை சிலை சின்னத்திற்கு உரிமை கோரி சசிகலா தரப்பு மற்றும் ஓபிஎஸ்- இபிஎஸ் அணியினர் தொடர்ந்து பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து வந்தனர். இறுதியில் தேர்தல் ஆணையம் இரட்டை சிலை சின்னத்தை ஓபிஎஸ்- இபிஎஸ் அணிக்கு வழங்கி உத்தரவிட்டனர்.

தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தரப்பினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியது சரியே என தீர்ப்பளித்தது.

பின்பு, இரட்டை இலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறியது. இது சசிகலா தரப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் அமமுக கட்சியினருக்கு குக்கர் சின்னம் வழங்காமல் அக்கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் சுயேட்சை வேட்பாளர்களாகவே கருதப்படுவார்கள் என கூறி இறுதியில் குக்கர் சின்னம் வழங்கப்பட்டது.

அண்மையில் பல்வேறு கட்ட யோசனைகளுக்கு பிறகு டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கட்சியாக பதிவு செய்தார் . அமமுகவின் பொதுச்செயலாளராக தினகரன் பதவி ஏற்றார். டிடிவி தினகரனின் இந்த திடீர் முடிவு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சசிகலா சார்பாக வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார்.அதிமுக மீதான உரிமை கோரும் வழக்கை சசிகலா நடத்த இருக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், தற்போது சசிகலா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

V K Sasikala Supreme Court Two Leaves Symbol
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment