கோவை வெடி விபத்து வழக்கில் மேலும் இருவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
கோவை உக்கடம் GM நகர் பகுதியை சேர்ந்த சனாபர் அலி, இதயத்துல்லா ஆகியோரை நேற்று காலை கைது செய்த என்.ஐ. ஏ அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஏற்கனவே 9 பேரை கைது செய்த போலிசார்.
அதில் 5 பேரை NIA அதிகாரிகள் காவலில் எடுத்து கோவையில் பல்வேறு இடங்களில் அழைத்து சென்று விசாரணை நடத்திய நிலையில், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மீண்டும் இருவரை கைது செய்துள்ளனர். என்.ஐ.ஏ விசாரணையில் தற்போது சில கைது தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை