Advertisment

மதுவில் சானிடைசர் கலந்து குடித்த சம்பவம் : 2 பேர் உயிரிழந்த சோகம்

கும்பகோணத்தில் கூடுதல் போதைக்கு ஆசைப்பட்டு மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
2 பேர்  உயிரிழந்த சோகம்

2 பேர் உயிரிழந்த சோகம்

 கும்பகோணத்தில் கூடுதல்  போதைக்கு ஆசைப்பட்டு மதுவில் சானிடைசர் கலந்து குடித்த  2 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

சவுந்தரராஜ், பாலகுரு இருவரும் கூலித் தொழிலாலர்கள். வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த இருவரும். மேலக்காவிரி  பகுதியில்  உள்ள காவிரி  ஆற்றிற்கு வந்துள்ளனர். ஒருவரும் மது மற்றும் சானிடைசர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் கூடுதல் போதைக்கு ஆசைப்பட்டு, மதுவில் சானிடைசர் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்தநாள் காலையில் காவிரி படித்துறைக்கு வந்த ஊர் மக்கள் இருவரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இந்த மரணம் எப்படி நிகழந்தது என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மரணத்திற்கு சானிடைசர் கலந்த மது குடித்ததுதான் காரணமா?என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment