கோவையில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு - போலீசார் தீவிர விசாரணை

கோவையில் மின்சாரம் தாக்கி தீத்திபாளையத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது உறவினர் நாகராஜ் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் மின்சாரம் தாக்கி தீத்திபாளையத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது உறவினர் நாகராஜ் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
death

கோவை, தீத்திபாளையத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த விக்னேஸ்வரன், தனது வீட்டின் பின்புறத்தில் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அவரது வீடு முழுவதும் சிமெண்ட் ஷீட்டால் மூடப்பட்டிருந்தது. மழைநீர் வெளியேறுவதற்காக ஒரு அலுமினிய ஷீட் பொருத்தப்பட்டிருந்தது. மழையின் காரணமாக அந்த அலுமினிய ஷீட்டில் நீர் வடிந்த நிலையில், அதில் மின்சாரம் பாய்ந்திருந்தது. இதை அறியாத விக்னேஸ்வரன், அதனை தொட்டபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்தார்.

Advertisment

அருகில் இருந்த அவரது உறவினர் நாகராஜ் மற்றும் அக்கம் பக்கத்தினர், விக்னேஸ்வரன் மின்சாரம் தாக்கி மயங்கிவிட்டார் என்பதை அறியாமல், உடனடியாக அவரை மாதம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

Cbe death 1

விக்னேஸ்வரன் உயிரிழந்த செய்தி கேட்டதும், அவரது உறவினரான நாகராஜ் மற்றவர்களிடம் அந்த இடத்தில் நடந்த சம்பவத்தை விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக அதே இடத்தை தவறுதலாக தொட்டதால், அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பின்னரே அந்த இடத்தில் மின்சாரக் கசிவு ஏற்பட்டுள்ளது என்பதை அங்கிருந்தவர்கள் அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

Advertisment
Advertisements

Cbe death 2

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: