சென்னை வானகரத்தில் திருநங்கைகளுடன் தனிமையில் சென்ற நபரை மிரட்டி பணம் பறித்த 2 காவலர்களைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் துணை ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை வானகரத்தில் திருநங்கைகளுடன் தனிமையில் சென்ற ஓட்டுநரை 2 காவலர்ள் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதற்கு ஓட்டுநர், பணம் கொடுக்க மறுத்தபோது, அவரை மிரட்டி, அவரது செல்போனை பறித்து, ஜிபே (GPay) மூலம் பணத்தைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து ஓட்டுநர் வானகரம் காவல் நிலையத்தில், மிரட்டி பணம் பறித்த 2 காவலர்கள் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் 2 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, வானகரம் காவல் நிலைய காவலர்கள் அரவிந்தன் மற்றும் சிவானந்தம் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். காவல் துணை ஆணையர் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.