/tamil-ie/media/media_files/uploads/2023/08/Tree.jpg)
ரண்டு அரச மரங்கள் இன்று மறு நடவு செய்யப்பட்டன.
கோயம்புத்தூர் வேலாண்டிபாளையத்தில் 15 டன் மற்றும் 7 டன் எடை கொண்ட இரண்டு அரச மரங்கள் இன்று மறு நடவு செய்யப்பட்டன.
கோவை தடாகம் சாலை நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட இருந்த 25 மரங்கள் கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் செயல் (ஒரு சமூக செயற்பாட்டு களம்) அமைப்பின் சார்பில் வேறுடன் அகற்றப்பட்ன.
தொடர்ந்து, இந்த மரங்கள் வேலாண்டிபாளையம், கோவில்மேடு பகுதியில் மறு நடவு செய்யப்பட்டன. இதில் 21 மரங்கள் துளிர்த்துள்ளன.
இந்த நிலையில் டிவிஎஸ் நகர் பேருந்து நிறுத்தத்தில் நன்கு வளர்ந்திருந்த அரச மரத்தின் கிளைகள் நறுக்கப்பட்டு 15 அடி உயரம் உள்ள 15 டன் எடை கொண்ட அரச மரத்தையும், ஏழு டன் எடை கொண்ட அரச மரத்தையும் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவு மிகுந்த கவனத்துடன் எடுத்துவரப்பட்டு இன்று அதிகாலை 4 மணி அளவில் மறு நடவு செய்யப்பட்டன.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.