/indian-express-tamil/media/media_files/2024/11/05/2IlEeM8cAmzadGvN2rFO.jpg)
தலைமறைவாக இருக்கும் நடிகை கஸ்தூரியை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை, எழும்பூரில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், திராவிடர்கள், தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பரப்பும் விதமாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்கு பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். குறிப்பாக, தெலுங்கு மக்கள் மற்றும் அமைப்பினரிடம் இருந்து கடும் எதிர்வினையாற்றப்பட்டது.
இதையடுத்து தனது உரைக்கு, நடிகை கஸ்தூரி வருத்தம் தெரிவித்திருந்தார். எனினும், பல்வேறு மாவட்டங்களில் அவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், நடிகை கஸ்தூரி தற்போது தலைமறைவாக இருக்கிறார்.
இதனிடையே, மதுரை திருநகர் நாயுடு மாகாஜன சங்கம் தாக்கல் செய்த புகாரின் பேரில், கஸ்தூரி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தனக்கு முன் ஜாமின் வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கஸ்தூரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், "தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். ஆகவே, என்னை இந்த வழக்கில் போலீசார் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தாது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.
மற்றொருபுறம், தலைமறைவாக இருக்கும் கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டதன் அடிப்படையில், எழும்பூர் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.