திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமென தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமென தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Trains cancelled diverted Madurai trichy mayiladuthurai tamil news

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக இரண்டு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

Advertisment

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடாக விளங்கும் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த நவம்பர் 2-ஆம் தேதி தொடங்கியது. இந்த விழா வரும் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கந்த சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். 

இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறவுள்ளது. இதன் தொடர்ச்சியாக காலை 6 மணிக்கு யாகை பூஜை தொடங்கி, 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும், அதன் பின்னர் பல்வேறு அபிஷேகங்களும் நடைபெறவுள்ளது. இதையடுத்து, மாலை 4:30 மணிக்கு சாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு கடற்கரையில் நடைபெறவுள்ளது. 

இந்த நிகழ்ச்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரவுள்ளனர். இதனால், 2 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதுநகர், சாத்தூர், வழியாக 7-ஆம் தேதி காலை 8:30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது. 

Advertisment
Advertisements

இதேபோல், 7-ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து இரவு 10:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக 8-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது.

 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Thiruchendur Murugan Kovil Tiruchendur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: