குளிர்பானத்தில் சிறுநீர் கலந்த விவகாரம்: சட்டக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரம், 2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்து துணை வேந்தர் நாகராஜ் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரம், 2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்து துணை வேந்தர் நாகராஜ் உத்தரவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
சச
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவருக்கு குளிர்பானத்தில்  சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரம், 2 மாணவர்கள்  சஸ்பெண்ட்  செய்து துணை வேந்தர் நாகராஜ் உத்தரவிட்டுள்ளார். 

Advertisment

க.சண்முகவடிவேல்

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் அடுத்துள்ள நவலூர் பகுதியில் தேசிய சட்ட பல்கலைக்கழகம்  செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரே வகுப்பில் 3 மாணவர்கள் இளங்கலை சட்டப்படிப்பு இறுதியாண்டு பயின்று வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி இரவு பட்டியலின மாணவருக்கு, சக மாணவர் இருவர் குளிர்பானத்தில் சிறுநீரை கலந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இருவரில் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர், மற்றொருவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை (MBC) சேர்ந்த மாணவர் என கூறப்படுகிறது. மறுநாள் வகுப்பில் குளிர்பானத்தில் சிறுநீரை கலக்கிக் கொடுத்த இச்சம்பவத்தை சொல்லி அந்த மாணவனை கேலி, கிண்டல் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவன் இது குறித்து தனது பேராசியர்களிடம் புகார் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

இப்புகார் குறித்து பேராசிரியர்கள், பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து இச்சம்பவத்தை குறித்து விசாரணை மேற்கொள்ள 3 உதவிப் பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. விசாரணைக்கு பின்னர் உதவிப் பேராசிரியர்கள் குழுவினர் 'ராகிங் செய்யும் நோக்கில் தான் 2 மாணவர்களும் நடந்துக் கொண்டுள்ளனர்' என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். 

அந்த அறிக்கையின் அடிப்படையில், பல்கலைக்கழக பதிவாளர் பாலகிருஷ்ணன் சிறுநீரை குளிர்பானத்தில் கலந்து கொடுத்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 மாணவர்கள் மீது திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பதிவாளரின் புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், சம்பவம் குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 2 மாணவர்களும் தற்காலிகமாக கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். நடப்பு கல்வியாண்டில் 10-வது செமஸ்டர் தேர்வு எழுதவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: