/tamil-ie/media/media_files/uploads/2023/09/Secretariate.jpg)
Tamilnadu Secretariat
தமிழக பிரிவு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எஸ்.கிருஷ்ணன், நீரஜ் மிட்டல் ஆகிய இருவரையும் மத்திய அரசுப் பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக பிரிவு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எஸ்.கிருஷ்ணன், நீரஜ் மிட்டல் ஆகிய இருவரையும் மத்திய அரசுப் பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பணி அனுபவம் குறித்து பார்ப்போம்.
கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
கிருஷ்ணன், 1989 ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரி, தற்போது தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றுகிறார். இவர் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் இந்த பதவியில் இருந்த அல்கேஷ் குமார் ஷர்மா ஆகஸ்ட் 31-ம் தேதி ஓய்வு பெற்றதையடுத்து, கிருஷ்ண ஐ.ஏ.எஸ் பதவியேற்றுள்ளார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரியான கிருஷ்ணன் இதற்கு முன்பு தமிழ்நாடு உள்கட்டமைப்பு வாரியத்தின் மாநில நிதிச் செயலாளராகவும், முதன்மை செயல் அதிகாரியாகவும் இருந்தார். இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி துறை செமிகண்டக்டர்களைச் சுற்றி லட்சியத் திட்டங்களைக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் அமைச்சக செயலாளராக பொறுப்பேற்கிறார். மேலும், டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு (DPDP) சட்டம், 2023-ன் வெளியீடு குறித்தும் ஆய்வு செய்வார்.
நீரஜ் மிட்டல் ஐ.ஏ.எஸ்
நீரஜ் மிட்டல் 1992 ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரி, முதலீட்டு ஊக்குவிப்பு முகமை வழிகாட்டியின் மேலாண்மை இயக்குநர் உட்பட மாநிலத்தில் பல்வேறு பதவிகளை வகித்தவர். தற்போது மத்திய அரசில் தொலைத்தொடர்புத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான கிருஷ்ணன், நீரஜ் மிட்டல் இருவர் உள்பட 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமனக் குழு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.