New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/01/Ar9EWDiSyspbtfmiYG9K.jpeg)
ஆர்.பி.உதயகுமார் பேட்டி
ஆர்.பி.உதயகுமார் பேட்டி
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.பி.அன்பழகன் ஆகியோர் நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.
பின்னர் அவர்கள் வெளியில் வந்தபோது, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பெயர் அ.தி.மு.க. பொறுப்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார்.
அதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளிக்கும்போது, "மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளுக்கு, தேர்தல் பொறுப்பாளர் பதவி கிடையாது. காரணம் மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்டத்தை பார்க்க வேண்டும்.
அதுமட்டுமின்றி நானும் மாவட்ட செயலாளராக உள்ளேன். எனக்கும் தேர்தல் பொறுப்பாளர் பதவி இல்லை. அ.தி.மு.க.வில் உள்ள 82 மாவட்ட செயலாளர்கள் யாருடைய பெயரும் தேர்தல் பொறுப்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.