Advertisment

ஓபிஎஸ், இ பி எஸ்; யாருக்கு முதல் சிறை? உதயநிதி பரபரப்பு பேச்சு

"மத்திய அரசு நிவாரண நிதியாக ஒரு பைசா கூட தரவில்லை; ஆனால் திமுக அரசு ஒரே மாதத்தில் ரூ.8000 வரை வழங்கி உள்ளது" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

author-image
WebDesk
New Update
Udhayanidhi II

சென்னை மேற்கு மண்டல திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொங்கல் பரிசுகள் வழங்கினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

udhayanidhi-stalin | சென்னை மேற்கு மாவட்ட திமுகவினருக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார்.

அவர் பொங்கல் பரிசுகளை வழங்கினார். அப்போது  பேசிய  அவர், " எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ,.பன்னீர்செல்வம் இடையே யார் முதலில் சிறைக்கு செல்வது என்ற போட்டி உள்ளது" என்றார்.

Advertisment

தொடர்ந்து பேசிய அவர், " மிச்ஜாம் புயல் நிவாரண நிதி உட்பட மத்திய அரசு ஒன்றும் வழங்கவில்லை; ஆனால் தமிழக அரசு ஒரே மாதத்தில் ரூ.8000 வரை வழங்கி உள்ளது.

முதலில் சிறைக்குள் செல்வது ஓபிஎஸ் என எடப்பாடி பழனிச்சாமியும்,  இபிஎஸ் என ஓ பன்னீர்செல்வம் மாறி மாறி கூறுகின்றனர். இருவருமே உள்ளே சென்றாள் ஆச்சரியப்படுவதற்கு இல்லை" என்றார்.

முன்னாள் முதலமைச்சர்களான ஓ பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் பிரிந்து செயல்படும் நிலையில் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்த ஓ பன்னீர்செல்வம், " நான் உண்மையை கூறினால் எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு செல்வார்" என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, " நான் உண்மையைச் சொன்னால் ஓ பன்னீர்செல்வம் தான் சிறைக்கு செல்வார்" எனக் கூறினார்.

இருவரின் பேச்சை விமர்சிக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment