Advertisment

உதயநிதியின் கருத்துக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என பிரதமர் கூறியது வருத்தம் அளிக்கிறது – ஸ்டாலின்

எந்த மதத்தையும், நம்பிக்கையையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை; உதயநிதியின் கருத்துக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் தனது அமைச்சர்கள் கூட்டத்தில் கூறியது வருத்தமளிக்கிறது - ஸ்டாலின்

author-image
WebDesk
New Update
Stalin and Udhay

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தனது மகனும் தமிழக அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து, சனாதன தர்மத்தின் பாரபட்சமான கொள்கைகள் குறித்து உதயநிதி கருத்து தெரிவித்ததாகவும், எந்த மதத்தையும், நம்பிக்கையையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், உதயநிதிக்கு எதிராக பா.ஜ.க ஆதரவு சக்திகள்தான் பொய்யான கதையை பின்னியிருக்கிறார்கள் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

Advertisment

"எந்தவொரு மதத்தையும் அல்லது மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் நோக்கமின்றி, தாழ்த்தப்பட்ட சாதிகள், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் சனாதன கொள்கைகள் குறித்து அவர் (உதயநிதி) தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார். அடக்குமுறை கொள்கைகளுக்கு எதிரான அவரது நிலைப்பாட்டை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க ஆதரவு சக்திகள், ‘சனாதன சிந்தனை கொண்டவர்களை இனப்படுகொலைக்கு அழைத்தார் உதயநிதிஎன்று பொய்யான கதையை பரப்பி வருகின்றனர்என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.,வால் வளர்க்கப்படும் சமூக ஊடகக் கும்பல் வட மாநிலங்களில் இந்தப் பொய்யைப் பரவலாகப் பரப்பி வருகிறது. ஆனால், மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்கள் இனப்படுகொலை என்ற வார்த்தையை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ பயன்படுத்தியதில்லை. அப்படியிருந்தும் பொய்கள் பரப்பப்பட்டன,” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர் அமித் மாளவியா X தளத்தில், "சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும்" என்ற உதயநிதியின் கருத்து, அதை பின்பற்றும் 80 சதவீத மக்களின் "இனப்படுகொலை"க்கான அழைப்பு என்று கூறியதை அடுத்து இந்த அறிக்கை வந்துள்ளது.

உதயநிதியின் கருத்துக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் தனது அமைச்சர்கள் கூட்டத்தில் கூறியது வருத்தமளிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். எந்தவொரு உரிமைகோரலையும் அல்லது அறிக்கையையும் சரிபார்ப்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் பிரதமரால் எளிதில் அணுக முடியும். அப்படியென்றால், உதயநிதி பற்றி பரப்பப்படும் பொய்களை பிரதமர் அறியாமல் பேசுகிறாரா, அல்லது தெரிந்தே பேசுகிறாரா?’’ என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

சனிக்கிழமை ஒரு நிகழ்வின் போது, ​​உதயநிதி சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டார். சனாதன தர்மத்தை வெறுமனே எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும் என்றார். அவரது கருத்துக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அவரது கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.

அதேநேரம் உதயநிதிக்கு ஆதரவாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, மனிதனின் கண்ணியத்தை உறுதிப்படுத்தாத எந்த மதமும் நோய் போன்றது என்று கூறினார்.

உதயநிதியின் சனாதன தர்மம் குறித்த கருத்துக்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, மத உணர்வுகளை சீற்றம் செய்ததாக உத்தரபிரதேச காவல்துறை உதயநிதி மற்றும் பிரியங்க் கார்கே மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளது.

உதயநிதியும் பா.ஜ.க தனது வார்த்தைகளை திரித்து வருவதாகவும், கவனத்தை திசை திருப்புவதற்காக தனது அறிக்கைகளை பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். அவரது கருத்துகள் தொடர்பாக அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றும் உதயநிதி தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mk Stalin Udhayanidhi Stalin Pm Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment