New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2023-07-07T181820.310.jpg)
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
இ.டி.யை பார்த்து பயப்பட மாட்டோம் என உதயநிதி ஸ்டாலின் திருமண விழாவில் பேசினார்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
தொடர்ந்து பொன்முடியை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளார்கள். இதற்கிடையில் காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் திருப்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டார்.
அப்போது, திமுக உங்களுடைய ED, IT, CBI சோதனைகளுக்கெல்லாம் நாங்கள் பயந்தவர்கள் கிடையாது. நாங்கள் பயப்பட மாட்டோம்” என்றார்.
உதயநிதியின் இந்தப் பேச்சை திமுகவினர் பகிர்ந்துவருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.