நாங்கள் பெரியார், அண்ணா, கருணாநிதியின் சீடர்கள்: சனாதன மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம்: உதயநிதி

நாங்கள் பெரியார், அண்ணா, கருணாநிதியை பின்தொடர்பவர்கள்; சனாதன மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

நாங்கள் பெரியார், அண்ணா, கருணாநிதியை பின்தொடர்பவர்கள்; சனாதன மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சனாதன ஒழிப்பு மாநாடு, சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி பேச்சு, உதயநிதி ட்வீட், Sanatana Abolition Conference, Udhayanidhi Speech at Sanatana Abolition Conference, Udhayanithi Tweet

உதயநிதி ஸ்டாலின்

சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்பது கொசு, மலேரியா, ப்ளூ, டெங்கு போன்றது. அதை அழிக்க வேண்டும் எனப் பேசியதாக செய்தி ஒன்றை பகிர்ந்து சட்ட உரிமை கண்காணிப்பகம் சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இதை ரீ-ட்வீட் செய்துள்ள உதயநிதி, “கொண்டு வாருங்கள், நான் எந்த சட்ட சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன். இது போன்ற சனாதன மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டேன்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையின் கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம்.
நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியை பின்தொடர்பவர்கள். இதனை இன்றும், நாளையும் என்றும் சொல்வேன்.

திராவிட மண்ணில் சனாதனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் பின்வாங்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stalin Karunanithi Udhayanidhi Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: