நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்து; முதல்முறையாக சொன்ன உதயநிதி: இணையத்தில் சர்ச்சை

உதயநிதி ஸ்டாலின் தீபாவளி வாழ்த்துச் சொல்வது குறித்துத் தயங்கிய சிலரைப் பற்றி குறிப்பிட்டு, இறுதியாக "நம்பிக்கை உள்ளவர்களுக்குத் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் தீபாவளி வாழ்த்துச் சொல்வது குறித்துத் தயங்கிய சிலரைப் பற்றி குறிப்பிட்டு, இறுதியாக "நம்பிக்கை உள்ளவர்களுக்குத் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Udhayanidhi Stalin warning to Union Education Minister Dharmendra Pradhan Tamil News

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் 20ஆம் தேதி (20.10.2025) மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் பயணப்படுவதில் மும்முரமாக உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டும் பட்டாசு வெடிப்பதற்கான கால வரம்பை தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் விதமாக, 2018 ஆம் ஆண்டு முதல் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின்படி, ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு இரண்டு நேரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும்.

Advertisment

கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று இந்த நேரக் கட்டுப்பாட்டைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு சென்னை பிராட்வேயில் திமுக சார்பில் நேற்று, அக்டோபர் 16, 2025 அன்று, ஒரு பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் அமைச்சரான சேகர்பாபு, சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாநிதிமாறன் மற்றும் கலாநிதி வீராசாமி உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பேச்சின்போது, தீபாவளி வாழ்த்துச் சொல்வது குறித்துப் பேசியது கூட்டத்தினர் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

அவர் பேசுகையில், "இந்த விழாவில் கலந்துகொண்ட சிலருக்கு என்ன சொல்லி வாழ்த்துவது என்றே தெரியவில்லை. 'தீபாவளி திருநாள் என்று சொல்லலாமா? வேண்டாமா? சொன்னால் இவர் ஏதாவது கோபம் கொள்வாரா?' என்று சில பேர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என்று கூறினார்கள்," என்று குறிப்பிட்டார். அதன் பின்னர், "நான் சொல்கிறேன் நம்பிக்கை உள்ளவர்களுக்குத் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்" என்று அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசியபோது, கூட்டத்தில் இருந்தவர்கள் பலத்த கைதட்டி ஆரவாரம் செய்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

Advertisment
Advertisements
Udhayanidhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: