/indian-express-tamil/media/media_files/j8dB0iFPUa09qFvqbwUj.jpg)
உதயநிதிக்கு இடைக்கால தடை
கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 7ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் “சனாதனம் என்றால் என்ன” என்பதைவீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்களே, கொடநாடு கொலை- கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளிலும் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒளிந்திருக்க முடியாது.ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்துக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டுசென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்தார். அதில் தன்னை பற்றி அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், உதயநிதி தன்னை பற்றி பேசியதற்கு ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மனுவில் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜரானார். உதயநிதி தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை.
இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் இ.பி.எஸ்-ஐ தொடர்புபடுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 வாரத்தில் பதிலளிக்கவும் நீதிபதி மஞ்சளா உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.