துணை முதல்வராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தனிச் செயலாளர் நியமனம் உள்படம் தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், துணை முதல்வராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தனிச் செயலாளர் நியமனம் உள்படம் தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 14 பேர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள உத்தரவில்,
1.தமிழக தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பாக, கால்நடைத்துறை செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
2.உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தனிச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3.கூடுதல் தலைமை செயலாளர் கோபால், உயர்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளர்.
4.தமிழக மின்சாரத்துறை தலைவராக இருந்த ராஜேஷ் லகானி, வருவாய் நிர்வாக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5.வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் சுந்தரவல்லி கல்லூரி கல்வித்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
6.பொதுத்துறை இணை செயலாளர் விஷ்ணு சந்திரன், வேலைவாய்ப்பு துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
7.சமூக நலத்துறை ஆணையராக இருந்த அமுதவல்லி கைத்தறி, ஜவுளித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
8.போக்குவரத்துத் துறை சிறப்பு செயலாளர் லில்லி, சமூக நலத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
9.சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையராக இருந்த லலிதா, ஜவுளித்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
10.திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் பொதுத்துறை துணை செயலாளர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளர்.
11.தமிழக மின்சார வாரிய தலைவராக நந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
12.கைத்தறி துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழக சிறு தொழில் வளர்ச்சி கழக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
13.தமிழக சிறுதொழில் வளர்ச்சி கழக தலைவர் ஸ்வர்னா, ரூசா திட்ட மாநில இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
14. நிதித்துறை இணை செயலாளர் பிரதீவ் ராஜ், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
15. கலால் துறை ஆணையராக முன்பு பதவி வகித்த, ஜெயகாந்தன் தமிழக நீர்நிலை மேம்பாட்டு திட்ட நிர்வாக இயக்குனராக நியமனம்” என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“