Advertisment

ஜெயலலிதா இருந்தபோது நீட் தேர்வு வரவில்லை: உதயநிதி ஸ்டாலின்

மறைந்த முதலமைச்சர் ஜெயலிதா இருந்த வரை நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு வரவில்லை. நீட் தேர்வை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தது யார் என்று உங்களுக்கு தெரியும்.

author-image
WebDesk
Oct 15, 2023 23:05 IST
New Update
Udhayanidhi II

திமுக கூட்டணியாக வந்தாலும், தனித்து வந்தாலும் திமுகதான் வெல்லும்” என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது,  “அதிமுக கூட்டணியாக வந்தாலும், தனித்து வந்தாலும் திமுகதான் வெல்லும்” என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisment

தொடர்ந்து அவர் பேசுகையில், “பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதாக ஏமாற்றி வருகிறது. நீட் தேர்வை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ரத்து செய்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலிதா இருந்த வரை நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு வரவில்லை. நீட் தேர்வை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தது யார் என்று உங்களுக்கு தெரியும்.

9 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்தார்? அதானி குடும்பம் மட்டுமே இந்த 9 ஆண்டுகால ஆட்சியில் வாழ்ந்தது.

2018ல் 2020-க்குள் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என பிரதமர் மோடி கூறினார்; தற்போது 2048-ல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று கூறிவருகிறார்.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதாக நம்மையெல்லாம் ஏமாற்றி வருகிறது; சேர்ந்து வந்தாலும் தனியாக வந்தாலும் வெல்லப்போவது திமுகதான்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

#Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment