மு.க ஸ்டாலினின் மகன் யாரிடமும் மனிப்பு கேட்க மாட்டேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் திமுக தீர்மான குழு சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இளைஞர் அணி சார்பில் அமைக்கப்பட்ட நூலகங்களுக்கு நூல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் “ பொய் செய்தியை வைத்துதான் கட்சியை நடத்துகிறார்கள். இதற்கு சிறந்த உதாரணம் 2 மாதங்களுக்கு முன்பு நான் ஒரு கூட்டத்தில் பேசினேன். நான் பேசாததையெல்லாம் பேசினேன் என்று சொன்னார்கள். அப்படியே விட்டிருந்தால் நான் பேசியது அந்த அரங்கத்திலேயே முடிந்து போயிருக்கும்.
யாருக்கும் இதை பற்றி தெரிந்திருக்காது, ஒட்டுமொத்த இந்தியாவும் இதை பற்றி பேசியது. நான் பேசியதற்கு நீதிமன்றத்தில் மனிப்பு கேட்கச் சொன்னார்கள். நான் பேசியது பேசியதுதான் என்று சொன்னேன். நான் சொன்ன கொள்கையில் உறுதியோடு இருப்பேன். நான் கலைஞருடைய பேரன், ஸ்டாலினின் மகன், யாரிடமும் மனிப்பு கேட்க மாட்டேன். நீட் தேர்வு எனது தனிப்பட்ட பிரச்சனை கிடையாது, திமுகவின், பிரச்சனை கிடையாது. அதுபோல இளைஞரணியின் பிரச்சனை கிடையாது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாணவர்களின் பிரச்சனை. எதிர்கட்சியாக இருக்கும்போது ஒரு வார்த்தை, ஆளும் கட்சியாக இருக்கும்போது வேறு வார்த்தை என்று கிடையாது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் இருக்கும் வித்தியாசத்தை நீங்கள் மக்களிடம் உணர்த்த வேண்டும்.
திமுகவில் பல அணிகள் உள்ளது. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி என்று. இந்த அணிகள் தலைவர் சொல்வதை செய்யும். அதுபோல பாஜகவில் இருக்கும் ஒரு அணிதான் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை. பாஜக சொல்வதை இந்த அணிகள் செய்யும். சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஏ.வ வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதிமுக ஆட்சியில் இருக்கும்போது, அதிமுக அமைச்சர்களை ரைய்டு செய்து அடிமையாக்கியதை போல திமுகவிடம் செய்ய நினைக்கிறார்கள். பாஜகவின் அமலாக்கதுறையை, வருமான வரித்துறையை பார்த்து திமுகவின் முத்த அமைச்சர்களுக்கு பயம் இல்லை. ஏன் திமுகவின் கிளைச் செயலாளர் கூட பாஜகவை பார்த்து பயப்பட மாட்டார்கள்” என்று ஆவர் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“