தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் போது மாணவிகளுக்கு இலவசமாக இருசக்கர வாகனம் வழங்கும் காலம் வரும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்னைய்நல்லூரில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. இந்த விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கினர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, ”எல்லோரும் படிக்க வேண்டும் என்பதுதான் திராவிடல் மாடல். படிக்கும் போதே மாணவர்கள் பொது அறிவை வளர்த்து கொள்ள வேண்டும், உலக அறிவை பெற புத்தகங்களை அதிகமாக படிக்க வேண்டும். மாணவர்கள் இப்போது இரவு 12 மணியானாலும் செல்போன் பயன்படுத்துகிறார்கள். மாணவர்கள் தினசரி நாளிதழ்கள் படிக்கவேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் போது மாணவிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் காலம் வரும் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“