Advertisment

சென்னை பல்கலை சர்ச்சை: ஐகோர்ட்டில் தமிழக அரசு மீது யு.ஜி.சி புகார்

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த உறுப்பினர் நீக்கப்பட்ட விவகாரம்; தமிழக அரசு அரசியல் நோக்கத்துடன் செயல்படுவதாக யு.ஜி.சி குற்றச்சாட்டு

author-image
WebDesk
New Update
ugc

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த உறுப்பினர் நீக்கப்பட்ட விவகாரம்; தமிழக அரசு அரசியல் நோக்கத்துடன் செயல்படுவதாக யு.ஜி.சி குற்றச்சாட்டு

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் இருந்து பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் நியமிக்கப்பட்ட உறுப்பினரை தமிழக அரசு தவறான நோக்கத்துடன் விலக்கி வைத்துள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) குற்றம் சாட்டியுள்ளது. உறுப்பினர் ஒதுக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் பல்கலைக்கழக மானியக் குழு கூறியுள்ளது.

Advertisment

சென்னை பல்கலைக்கழகக் கழக துணைவேந்தர் தேடல் குழுவில், கர்நாடக மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பட்டு சத்யநாராயணா, சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் கே. தீனபந்து (மாநில திட்டக்குழு உறுப்பினர்), மற்றும் செனட் உறுப்பினர் P. ஜெகதீசன் (பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்) ஆகியோரைக் கொண்ட குழுவை தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்தக் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த உறுப்பினர் இடம்பெறவில்லை.

இதனையடுத்து, செப்டம்பர் 13, 2023 அன்று 3 பேர் கொண்ட தேடல் குழுவை அமைத்து உயர்கல்வித் துறை பிறப்பித்த அரசாணையை (G.O.) ரத்து செய்யுமாறும், பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரைந்த உறுப்பினரை குழுவில் சேர்க்க மாநில அரசுக்கு உத்தரவிடுமாறும் உயர் நீதிமன்றத்தை வலியுறுத்தி, வழக்கறிஞர் பி. ஜெகநாத் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி D. பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, UGC பரிந்துரைத்த உறுப்பினரை தமிழக அரசு வேண்டுமென்றே ஒதுக்கியதாக குற்றம் சாட்டிய மனுதாரர், மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையிலான அரசியல் சண்டையின் காரணமாக, கல்வித் திறனை உறுதி செய்யும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட மிக முக்கியமான ஆணையத்தை விலக்கி வைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது, என்று கூறினார்.

பின்னர், பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் எதிர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த எதிர் பிரமாணப் பத்திரத்தில், மாநிலப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் உறுப்பினர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு வலியுறுத்தியது, மேலும் இந்த நிலைப்பாடு 2020 முதல் வழங்கப்பட்ட முடிவுகளின் தொகுப்பில் உச்ச நீதிமன்றத்தால் தெளிவுபடுத்தப்பட்டது என்றும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

மேலும், துணைவேந்தர் பதவிக்கு சரியான வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் ஆணையத்தின் முக்கிய பங்கை வலியுறுத்தி சமீபத்தில் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியதாகவும், ஆனால் தேடல் குழுவில் இருந்து யு.ஜி.சி விலக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்து மனுதாரரின் வழக்கை UGC ஆதரித்தது.

தேடுதல் குழுவை அமைப்பதற்கான செயல்முறை குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று நீதிமன்றத்தில் புகார் அளித்த யு.ஜி.சி, “முதல் பிரதிவாதி (மாநில அரசு) அற்ப அரசியல் நோக்கத்திற்காக தவறான அணுகுமுறையைப் பின்பற்றுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று வாதிட்டது.

2018 ஆம் ஆண்டு யு.ஜி.சி விதிமுறைகளின் பிரிவு 7.3ஐக் குறிப்பிட்டு, மாநில, தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேடல் குழுக்களில் யு.ஜி.சி பரிந்துரையாளரைச் சேர்க்க வேண்டும் என்று ஆணையம் கூறியது.

கே. பிரனீத் எதிர் யு.ஜி.சி (2020), பி.எஸ். ஸ்ரீஜித் எதிர் எம்.எஸ். ராஜஸ்ரீ (2022) மற்றும் கம்பீர்தன் கே. காட்வி எதிர் குஜராத் அரசு (2022) ஆகிய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் சட்டத்தின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகக் கூறுகின்றன, எனவே, UGC பரிந்துரைக்கப்பட்டவரைச் சேர்க்காதது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று UGC தரப்பில் வாதிடப்பட்டது.

அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், உயர்த்தவும் பல தசாப்தங்களாக சென்னை பல்கலைக்கழகத்திற்கு மானியம் மற்றும் பிற நிதிகளை வழங்கி வருவதாகக் கூறி, தேடுதல் குழு UGC பரிந்துரைக்கப்பட்ட நபரை சேர்க்க வேண்டியது அவசியம் UGC என்று கூறியது.

இருப்பினும், மாநில அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சுண்முகசுந்தரம், மனுதாரரின் வழக்கை கடுமையாக எதிர்த்தார் மற்றும் வழக்கை கேள்விக்குள்ளாக்கினார். முதற்கட்ட வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்கை நவம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ugc Tamil Nadu Government University Of Madras
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment