Advertisment

Russia-Ukraine crisis Highlights: உக்ரைனுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய முடிவு.. ஐ.நா.வின் இந்திய தூதர் தகவல்!

Russia Ukraine war, Ukraine Russia conflict latest news 28 February 2022 ரஷ்யா-உக்ரைன் போர் குறித்த அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Russia-Ukraine crisis Highlights: உக்ரைனுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய முடிவு.. ஐ.நா.வின் இந்திய தூதர் தகவல்!

மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய முடிவு  செய்துள்ளதாக’ ஐ.நா.வின் 11வது அவசர சிறப்பு கூட்டத்தில் இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி அறிவித்துள்ளார்.

Advertisment

உக்ரைனின் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுடன் "முன்நிபந்தனைகள் எதுவும் இல்லாமல்" பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஒப்புக்கொண்டார். பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெங்கோவிடம் தொலைபேசியில் பேசிய பிறகு விலாடிமிர் ஜெலன்ஸ்கி இதனை தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிகாரிகள் பங்கேற்க தயார் என்றும் உக்ரைன்-பெலாரஸ் எல்லையில் பிரிப்யத் நதி அருகே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.

ஐ.நா. அவசரக் கூட்டம்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று (பிப்.28) அவசரக் கூட்டம் நடத்தவுள்ளது. முன்னதாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்துக்கு 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அமீரகம் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் 352 பேர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரில் இதுவரை 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 116 குழந்தைகள் உள்பட 1,500-க்கும் அதிகமானாேர் காயமடைந்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணுவ வீரர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த தகவலை உக்ரைன் மற்றும் ரஷ்யா வெளியிடவில்லை.

ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடை: அமெரிக்கா நடவடிக்கை

ரஷ்யாவின் அணு ஆயுதப் படைப் பிரிவினரை அந்நாட்டு அதிபர் புதின் உஷார் படுத்தியுள்ளதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் தெரிவித்துள்ளன. இதையடுத்து, ரஷ்ய எரிசக்தி துறைக்கு புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அணு ஆயுதப் படைகளை ரஷ்யா உஷார் படுத்தியிருப்பது மூன்றாம் உலகப் போருக்கு கொண்டு சென்றுவிடக் கூடும் என்று சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

பொருளாதாரத் தடைகளுக்கு ரஷ்யா பதிலடி

ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வரும் நிலையில், தங்கள் நாட்டின் பங்களிப்புடன் விண்வெளியில் செயல்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் கீழே விழச் செய்துவிடுவோம் என்று ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் டிமிட்ரி ரோகோஜின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

420 டன் எடை கொண்ட விண்வெளி ஆய்வு நிலையத்தை ஒருவேளை கீழே விழச் செய்தால் அது அமெரிக்கா அல்லது ஐரோப்பாவிலோ, இந்தியா அல்லது சீனாவிலோ விழக் கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:25 (IST) 28 Feb 2022
    ஐரோப்பிய ஒன்றிய இணைப்பு விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் கையெழுத்து

    ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைத்துக் கொள்ள கோரிய விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கையெழுத்து இட்டுள்ளார்



  • 21:41 (IST) 28 Feb 2022
    உக்ரைனில் போரால் மக்கள் உயிரிழப்பது வருத்தமளிக்கிறது - ஐ.நா. பொதுச்செயலாளர்

    உக்ரைனில் அதிகரித்து வரும் போர் சம்பவங்களால் மக்கள் உயிரிழப்பது வருத்தமளிக்கிறது என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்



  • 21:32 (IST) 28 Feb 2022
    கார்கிவ் மீது ரஷ்ய ஷெல் தாக்குதலில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தகவல்

    கார்கிவ் நகரில் ரஷ்ய ஷெல் தாக்குதலில் குறைந்தது 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், உக்ரைனில் பொதுமக்களுக்கு எதிரான 'காட்டுமிராண்டித்தனமான' ரஷ்ய வான்வழித் தாக்குதல்களுக்கு இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • 20:50 (IST) 28 Feb 2022
    உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ஏவுகணை தாக்குதலுக்கான அபாய ஒலி

    உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ஏவுகணை தாக்குதலுக்கான அபாய ஒலி எழுப்பப்பட்டு வருகிறது



  • 20:28 (IST) 28 Feb 2022
    உக்ரைன், கார்கிவ் பகுதியில் ரஷ்ய தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

    உக்ரைன், கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வான்வெளி தாக்குதலில் பொது மக்கள் 5 பேரும், ராணுவ வீரர்கள் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் பொது மக்கள் 22 பேரும், ராணுவ வீரர்கள் 20 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர்



  • 20:26 (IST) 28 Feb 2022
    ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்கா அறிவுறுத்தல்

    ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது



  • 20:17 (IST) 28 Feb 2022
    உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு

    உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வான்வெளி தாக்குதலுக்கான அபாய ஒலி எழுப்பப்பட்டால் மட்டுமே, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வெளியே வர வேண்டும். சிறப்பு அனுமதியுடன் வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படும் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது



  • 19:57 (IST) 28 Feb 2022
    ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா உட்பட 36 நாடுகளுக்கு வான்வெளியை மூடிய ரஷ்யா

    அனைத்து ரஷ்ய விமானங்களுக்கும் வான்வெளிகளை மூடுவதற்கான நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் கனடா உட்பட 36 நாடுகளின் விமானங்களுக்கு ரஷ்யா தனது வான்வெளியை மூடியுள்ளது.

    ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷ்ய விமானங்களுக்கு வார இறுதியில் தங்கள் வான்வெளியை மூடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் எடுத்த முடிவைத் தொடர்ந்து, ரஷ்யா இந்த முடிவை எடுத்துள்ளது



  • 19:53 (IST) 28 Feb 2022
    உக்ரைன் நிலைமை குறித்து பிரதமர் மோடி மற்றொரு உயர்மட்டக் கூட்டத்திற்கு அழைப்பு

    பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை மாலை உக்ரைன் நெருக்கடி தொடர்பாக இரண்டாவது உயர்மட்டக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார், முந்தைய கூட்டத்தில் நான்கு மத்திய அமைச்சர்களை போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி, அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டது.

    ஞாயிற்றுக்கிழமை மாலையும் ஒரு கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மோடி, ரஷ்யாவால் தாக்கப்பட்ட உக்ரைனில் இருந்து இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் வெளியேற்றம் தனது அரசாங்கத்திற்கு முதன்மையான முன்னுரிமை என்று வலியுறுத்தினார்.

    மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு மற்றும் வி கே சிங் ஆகியோர் இந்தியாவின் "சிறப்பு தூதர்களாக" செல்வார்கள் என்று அரசு வட்டாரங்கள் முன்னதாக தெரிவித்தன



  • 19:51 (IST) 28 Feb 2022
    உக்ரைனில் இருந்து 8 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றம் - வெளியுறவுத்துறை

    உக்ரைனில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது



  • 19:46 (IST) 28 Feb 2022
    ஐ.நா.கூட்டத்திற்கு செல்லும் பயணத்தை ரத்து செய்தார் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்

    சுவிட்சர்லாந்து, ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.கூட்டத்திற்கு செல்லும் பயணத்தை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் ரத்து செய்துள்ளார். ரஷ்யாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வான்வெளியை மூடியதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது



  • 19:33 (IST) 28 Feb 2022
    ரஷ்யா - உக்ரைன் இடையே பெலாரசில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை நிறைவு

    ரஷ்யா - உக்ரைன் இடையே பெலாரசில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது



  • 19:17 (IST) 28 Feb 2022
    ரஷ்யாவின் மத்திய வங்கியில் முதலீடுகளை நிறுத்தியது அமெரிக்கா

    உக்ரைன் படையெடுப்பிற்கு கடுமையான பதிலடியாக, ரஷ்ய மத்திய வங்கியை அமெரிக்கா துண்டித்து, அரசு முதலீட்டு நிதியை தடை செய்துள்ளது



  • 18:57 (IST) 28 Feb 2022
    பாதுகாப்பு காரணமாக பெலாரஸில் உள்ள தூதரகத்தை மூடிய அமெரிக்கா

    பெலாரஸில் உள்ள அமெரிக்க தூதரகத்தை வெளியுறவுத்துறை மூடியுள்ளது மற்றும் உக்ரைனில் நடந்த போர் காரணமாக ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் உள்ள அத்தியாவசியமற்ற ஊழியர்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கிறது.

    திங்களன்று ஒரு அறிக்கையில் மின்ஸ்க் தூதரகத்தின் செயல்பாடுகளை இடைநிறுத்துவதாகவும், ரஷ்ய படையெடுப்பு குறித்தும் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறினார்.

    "உக்ரைனில் ரஷ்ய இராணுவப் படைகளின் தூண்டுதலற்ற மற்றும் நியாயமற்ற தாக்குதலில் இருந்து உருவான பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக நாங்கள் இந்த நடவடிக்கைகளை எடுத்தோம்," என்று அவர் கூறினார். (ஏபி)



  • 18:19 (IST) 28 Feb 2022
    பாம்பு தீவில் ராணுவ வீரர்கள் உயிருடன் இருப்பதாக உக்ரைன் கடற்படை அறிவிப்பு

    உக்ரைனில் உள்ள பாம்பு தீவில் ராணுவ வீரர்கள் உயிருடன் இருப்பதாக உக்ரைன் கடற்படை அறிவித்துள்ளது. முன்னதாக பாம்பு தீவில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்களை ரஷ்யா கொன்றதாக செய்திகள் வெளியான நிலையில் உக்ரைன் கடற்படை மறுப்பு தெரிவித்துள்ளது



  • 18:08 (IST) 28 Feb 2022
    கார்கிவ் நகரம் மீதான ராக்கெட் தாக்குதல்களில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தகவல்

    திங்கள்கிழமை காலை உக்ரைனின் கார்கிவ் நகரின் மீது ரஷ்யப் படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதல்களில் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் உள்துறை அமைச்சக ஆலோசகர் அன்டன் ஹெராஷ்செங்கோ தெரிவித்தார். "கார்கிவ் மீது ராக்கெட்டுகளால் பெரியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. டஜன் கணக்கானவர்கள் இறந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கான காயமடைந்தவர்கள்" என்று அவர் பேஸ்புக்கில் ஒரு பதிவில் கூறினார். (ராய்ட்டர்ஸ்)



  • 17:41 (IST) 28 Feb 2022
    உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை வெளியேற்ற போலந்து உதவி: ஜெய்சங்கர் பாராட்டு

    “போலந்தின் தூதர் உடன் உக்ரைன் நிலவரம் பற்றி விவாதித்தேன். உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை வெளியேற்றுவதற்கு போலந்தின் உதவிக்கு பாராட்டுக்கள். அந்த வகையில் போலந்து தூதரின் ஆதரவு வார்த்தைகள் மிகவும் வரவேற்கத்தக்கது” என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.



  • 17:41 (IST) 28 Feb 2022
    உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை வெளியேற்ற போலந்து உதவி: ஜெய்சங்கர் பாராட்டு

    “போலந்தின் தூதர் உடன் உக்ரைன் நிலவரம் பற்றி விவாதித்தேன். உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை வெளியேற்றுவதற்கு போலந்தின் உதவிக்கு பாராட்டுக்கள். அந்த வகையில் போலந்து தூதரின் ஆதரவு வார்த்தைகள் மிகவும் வரவேற்கத்தக்கது” என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.



  • 17:35 (IST) 28 Feb 2022
    ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனியர்களுக்கு 3 ஆண்டுகள் வரை தங்கும் உரிமை வழங்க திட்டம்

    போரிலிருந்து வெளியேறும் உக்ரேனியர்களுக்கு 27 நாடுகளைக் கொண்ட குழுவில் மூன்று ஆண்டுகள் வரை தங்கி பணிபுரியும் உரிமையை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகி வருகிறது, உக்ரைனிலிருந்து வருபவர்களுக்கு உதவியதற்காக எல்லையில் உள்ள தன்னார்வலர்களுக்கு மூத்த ஐரோப்பிய ஒன்றிய மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.

    இதுவரை குறைந்தபட்சம் 300,000 உக்ரேனிய அகதிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைந்துள்ளனர், மேலும் இந்த முகாம் இன்னும் மில்லியன் கணக்கானவர்களுக்கு தயாராக வேண்டும் என்று அவர்கள் கூறினர். ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களான போலந்து, ருமேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரி ஆகியவை உக்ரைனுடன் நில எல்லைகளைக் கொண்டுள்ளன. (ராய்ட்டர்ஸ்)



  • 17:20 (IST) 28 Feb 2022
    உக்ரைன் மக்களுக்கு விசா வழங்கப்படும் - இங்கிலாந்து பிரதமர்

    உக்ரைன் மக்களுக்கு இங்கிலாந்து வர விசா வழங்கப்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்



  • 17:01 (IST) 28 Feb 2022
    உக்ரைனில் இருந்து 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேறி உள்ளனர் - ஐ.நா.

    உக்ரைனில் இருந்து இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேறி உள்ளனர். உக்ரைனில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் எதிர்கால நிலைமை மேலும் மோசமடையும் என ஐ.நா தெரிவித்துள்ளது



  • 16:57 (IST) 28 Feb 2022
    போரை உடனடியாக ரஷ்யா நிறுத்த வேண்டும் - அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் வாதம்

    உக்ரைன் மீதான போரை உடனடியாக ரஷ்யா நிறுத்த வேண்டும். உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற உத்தரவிட வேண்டும் என பெலாரஸில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் வலியுறுத்தி வருகிறது



  • 16:54 (IST) 28 Feb 2022
    இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உக்ரைன் முயற்சி - இந்திய தூதர் இகோர் பொலிகா

    உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உக்ரைன் அதிகாரிகள் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என இந்திய தூதர் இகோர் பொலிகா தெரிவித்துள்ளார்



  • 16:37 (IST) 28 Feb 2022
    உக்ரைன் – ரஷ்யா இடையே அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பம்

    உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பெலாரஸ் எல்லையில் தொடங்கியுள்ளன என்று உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் குறுஞ்செய்தி மூலம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். முன்னதாக உக்ரைன் அதிபர் அலுவலகம் பேச்சுவார்த்தைக்கான உக்ரைனின் கோரிக்கைகள் உடனடி போர்நிறுத்தம் மற்றும் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை திரும்பப் பெறுவது என்று கூறியது. (ராய்ட்டர்ஸ்)



  • 16:24 (IST) 28 Feb 2022
    உக்ரைனில் 2 நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்

    ரஷ்யப் படைகள் தென்கிழக்கு உக்ரைனில் உள்ள இரண்டு சிறிய நகரங்களையும், அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியையும் கைப்பற்றியதாக Interfax செய்தி நிறுவனம் கூறியுள்ளது, ஆனால் ரஷ்யாவின் இராஜதந்திர மற்றும் பொருளாதார சிக்கல்கள் அதிகமானதால் மற்ற இடங்களில் மெதுவாக முன்னேறி வருகிறது.

    நான்கு நாட்கள் சண்டை மற்றும் சிலர் எதிர்பார்த்ததை விட மெதுவாக சென்ற ரஷ்ய முன்னேற்றத்திற்குப் பிறகு, உக்ரேனிய பிரதிநிதிகள் ரஷ்ய பிரதிநிதிகளுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக ரஷ்ய கூட்டாளியான பெலாரஸின் எல்லைக்கு வந்துள்ளனர் என்று உக்ரேனிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எந்த முன்னேற்றமும் அடைய முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    திங்கட்கிழமை கிழமைக்கு முன்னதாகவே தலைநகர் கீவ் மற்றும் முக்கிய கிழக்கு நகரமான கார்கிவ் ஆகிய இடங்களில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் முக்கிய நகர்ப்புற மையங்களைக் கைப்பற்றுவதற்கான ரஷ்ய தரைப்படைகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

    எவ்வாறாயினும், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைனின் தென்கிழக்கு ஜபோரிஜ்ஜியா பகுதியில் உள்ள பெர்டியன்ஸ்க் மற்றும் எனர்ஹோடார் நகரங்களையும், ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியையும் அதன் படைகள் கைப்பற்றியதாக இன்டர்ஃபாக்ஸ் தெரிவித்துள்ளது. ஆலையின் செயல்பாடுகள் வழக்கம் போல் தொடர்ந்தன. (ராய்ட்டர்ஸ்)



  • 16:09 (IST) 28 Feb 2022
    இந்திய மாணவர்களை வரவேற்கிறோம் - போலந்து

    உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் உட்பட 2 லட்சம் பேர் போலந்து எல்லையில் தஞ்சம் அடைந்துள்ளனர். போலந்து நாட்டிற்கு இந்திய மாணவர்களை வரவேற்கிறோம் என போலந்து நாட்டிற்கான இந்திய தூதர் ஆடம் புராகோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்



  • 15:56 (IST) 28 Feb 2022
    உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகள் - நேட்டோ தகவல்

    உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், நிதியுதவி தரப்படும் என நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.



  • 15:50 (IST) 28 Feb 2022
    உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகள் - நேட்டோ தகவல்

    உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், நிதியுதவி தரப்படும் என நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.



  • 15:16 (IST) 28 Feb 2022
    உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்க்க வேண்டும் - அதிபர் வலியுறுத்தல்

    உக்ரைனை உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.



  • 15:09 (IST) 28 Feb 2022
    உக்ரைனில் 102 பொதுமக்கள் பலி, 304 பேர் காயம் - ஐநா உரிமைகள் தலைவர்

    உக்ரைனில் 102 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 304 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐநா மனித உரிமைகள் தலைவர் பேச்லெட் கூறியுள்ளார்.இருப்பினும், உண்மையான எண்ணிக்கை அதிகமான இருக்கலாம் என்றார்.



  • 14:52 (IST) 28 Feb 2022
    கீவ்வில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக வெளியேற ரஷ்ய இராணுவம் அனுமதி

    உக்ரைன் தலைநகர் கீவ்வில் வசிப்பவர்கள் விரும்பினால், நகரத்தை விட்டு வெளியேற பாதுகாப்பான நடைபாதையைப் பயன்படுத்தலாம் என்று ரஷ்ய இராணுவம் கூறியுள்ளது.

    ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் இகோர் கொனாஷென்கோவ் திங்களன்று, கிய்வ் குடியிருப்பாளர்கள் உக்ரேனிய தலைநகரின் தென்மேற்கே வாசில்கிவ் செல்லும் நெடுஞ்சாலையை பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம் என்று கூறினார். உக்ரேனிய தலைநகரின் பல்வேறு பகுதிகளில் சண்டை மூண்ட நிலையில், தலைநகரின் பல்வேறு பிரிவுகளில் ரஷ்யப் படைகளின் சிறு குழுக்களுடன் தாங்கள் சண்டையிடுவதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறினர்.



  • 14:41 (IST) 28 Feb 2022
    தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் - ஜெய்சங்கரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்

    உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களுக்கு உணவு, இருப்பிட வசதி, பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களை மீட்க வேண்டும். தேவையான நடவடிக்கை எடுக்க தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான தொலைப்பேசி உரையாடலில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.



  • 14:30 (IST) 28 Feb 2022
    இந்திய மாணவர்களை எல்லையை கடக்க விடாமல் தடுக்கும் உக்ரைன் ராணுவம்

    இந்திய மாணவர்களை வெளியேற விடாமல் உக்ரைன் ராணுவம் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உக்ரைன் ராணுவம் வானத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியும், போலந்து எல்லைக்குள் செல்வதை தடுத்திட அவர்களுக்கு நடுவே கார்களை நிறுத்தும் செயலில் ஈடுபடுவதாக கேரள மாணவர்கள் குற்றச்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக மாணவி பேசிய காணொலியை மலையாள செய்தி நிறுவனம் Mathrubhumi வெளியிட்டுள்ளது.



  • 13:53 (IST) 28 Feb 2022
    உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விரையும் 4 மத்திய அமைச்சர்கள்

    உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த 4 மத்திய அமைச்சர்கள் அண்டை நாடுகளுக்கு செல்கிறார்கள். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா மற்றும் மால்டோவா நாடுகளுக்கு செல்கிறார். மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஸ்லோவாக்கியா செல்கிறார். மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஹங்கேரிக்கு விரைகிறார். மத்திய இணை அமைச்சர் வி.கே சிங் போலந்து செல்கிறார்.



  • 13:47 (IST) 28 Feb 2022
    ரஷ்யாவிற்கு தடை விதிக்க சீனா எதிர்ப்பு

    மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்து வரும் நிலையில், அவை அனைத்தும் ஒரு தலைப்பட்சமானது என சீன வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.



  • 13:22 (IST) 28 Feb 2022
    உக்ரைன்-ரஷ்யா போர் - பிற்பகல் 2:30 மணிக்கு பேச்சுவார்த்தை

    உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை நிறுத்துவது தொடர்பாக பெலாரஸில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்குகிறது



  • 13:14 (IST) 28 Feb 2022
    ரஷ்ய ராணுவம் தாக்குதல் வேகம் குறைந்தது - உக்ரைன்

    ரஷ்யா - உக்ரைன் நாடுகள் இடையே பெலாரஸில் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் வேகம் குறைந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.



  • 13:04 (IST) 28 Feb 2022
    3,4 ஆம் தேதிகளில் தமிழகத்தில் மழை

    வரும் 3 மற்றும் 4 தேதிகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



  • 13:03 (IST) 28 Feb 2022
    10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை

    தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு



  • 12:39 (IST) 28 Feb 2022
    பெலாரஸில் பேச்சுவார்த்தை

    ரஷ்யா - உக்ரைன் இடையே பெலாரஸில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் வேகம் குறைந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்களுக்காக கடைகள் திறக்கப்பட்டுள்ளன.



  • 12:27 (IST) 28 Feb 2022
    உலகின் மிகப்பெரிய விமானத்தை தாக்கி அழித்த ரஷ்யா

    உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான ஆன்டனவ்-ஏ.என்.-225 மீது குண்டு வீசி அழித்ததாக உக்ரைன் அரசு தகவல்



  • 11:49 (IST) 28 Feb 2022
    கீவ்வில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது - உக்ரைன்

    உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. உக்ரைன் தலைநகர் கட்டுப்பாட்டில் உள்ளது என்று உக்ரைன் ராணுவம் அறிக்கை



  • 11:17 (IST) 28 Feb 2022
    பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்

    உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியர்களை மீட்டெடுக்க அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்கள் செல்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.



  • 11:15 (IST) 28 Feb 2022
    அமைதிப் பேச்சுவார்த்தை : பெலாரஸ் சென்றது உக்ரைன் குழு

    ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்த உக்ரைன் குழு பெலாரஸ் சென்றுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்துவது தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.



  • 10:48 (IST) 28 Feb 2022
    தலைநகரில் வான்வெளி தாக்குதல்: உக்ரைன் ராணுவம் உஷார்

    தலைநகர் கீவ்வில் ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தப்போவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க ராணுவத்திற்கு உக்ரைன் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டு ராணுவத்தின் உஷார் நிலையில் உள்ளனர்.



  • 10:47 (IST) 28 Feb 2022
    தலைநகரில் வான்வெளி தாக்குதல்: உக்ரைன் ராணுவம் உஷார்

    தலைநகர் கீவ்வில் ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தப்போவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க ராணுவத்திற்கு உக்ரைன் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டு ராணுவத்தின் உஷார் நிலையில் உள்ளனர்.



  • 10:21 (IST) 28 Feb 2022
    மேற்கத்திய நாடுகளுக்கு பெலாரஸ் எச்சரிக்கை

    அணுசக்தி அல்லாத அந்தஸ்தை கைவிட பெலாரஸில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒப்புதல் கிடைத்தது. 65.16 சதவீதம் பேர் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாகவும், 10.07 சதவீதம் அதற்கு எதிராகவும் வாக்கு செலுத்தியிருந்தனர்.

    போலந்து, லிதுவேனியாவில் அணு ஆயுதங்களை நீங்கள் (மேற்கத்திய நாடுகள்) பரிமாற்றினால், நாங்கள் ரஷ்யாவிடம் அளித்த அணு ஆயுதங்களை திரும்பப் பெறுவோம் என்று எச்சரித்தார் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெங்கோ.



  • 10:02 (IST) 28 Feb 2022
    அடுத்த 24 மணி நேரம் பயங்கரமானதாக இருக்கும்-உக்ரைன் அதிபர்

    உக்ரைனில் அடுத்த 24 மணிநேரம் பயங்கரமானதாக இருக்கும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்தார்.



  • 09:55 (IST) 28 Feb 2022
    ரஷ்ய ரூபிள் வரலாறு காணாத அளவு வீழ்ச்சி

    டாலருக்கு எதிராக ரஷ்ய ரூபிள் வரலாறு காணாத அளவுக்கு இன்று வீழ்ச்சியடைந்தது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததற்காக கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அறிவித்த பின்னர், ரஷ்ய ரூபிள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.



  • 09:47 (IST) 28 Feb 2022
    அடுத்த 24 மணி நேரம் பயங்கரமானதாக இருக்கும்-உக்ரைன் அதிபர்

    உக்ரைனில் அடுத்த 24 மணிநேரம் பயங்கரமானதாக இருக்கும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்தார்.



  • 09:38 (IST) 28 Feb 2022
    தனித்தனியாக 2 கூட்டங்களை கூட்டுகிறது ஐ.நா.

    உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. தனித்தனியாக 2 கூட்டங்களை இன்று நடத்தவுள்ளது. ஐ.நா.வில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் பொது கூட்டம் தனியாகவும், சக்திவாய்ந்த 15 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தனியாகவும் கூடவுள்ளது.



  • 09:22 (IST) 28 Feb 2022
    கதிரியக்க கழிவுகளை அகற்றும் தளம் மீது தாக்குதல்

    உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள கதிரியக்க கழிவுகளை அகற்றும் தளத்தை ஏவுகணைகள் தாக்கியதாக ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது. ஆனால் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவோ அல்லது கதிரியக்க பொருட்கள் வெளியானதற்கான அறிகுறிகளோ இல்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.



  • 09:13 (IST) 28 Feb 2022
    உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு: பிரேசில் அதிபர் கருத்து

    உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு செய்துள்ள விவகாரத்தில் நாங்கள் நடுநிலை வகிக்கிறோம் என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ கருத்து தெரிவித்துள்ளார்.



  • 09:00 (IST) 28 Feb 2022
    100 மாணவர்களை வரவேற்ற குஜராத் முதல்வர்!

    உக்ரைனில் சிக்கிய மாணவர்களில் 100 பேர் குஜராத்துக்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர். அவர்களை அந்த மாநில முதல்வர் பூபேந்திர படேல் வரவேற்றார்.



Live Updates Tamilnadu Live News Udpate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment