Advertisment

'புதிய கல்விக் கொள்கையில் இணைய மத்திய அரசு அழுத்தம்': அன்பில் மகேஷ் பகீர் குற்றச்சாட்டு

புதிய கல்விக் கொள்கை திட்டத்தில் இணைய மத்திய அரசு அழுத்தம் தருகிறது- தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

author-image
WebDesk
New Update
TN Education minister Anbil Mahesh Teacher posts ignored in 10 year rule AIADMK Tamil News

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த மூன்று ஆண்டுகளில் கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கியுள்ளோம்.

Advertisment

மேலும் நகர்ப்புற , கிராமப்புற மாணவர்கள் மட்டுமின்றி மலைப்பிரசேதங்களில் உள்ள மாணவர்களுக்கும் கல்வி பயில முடியாத நிலையை மாற்றி அனைவருக்கும் கல்வி என்ற முறையைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பி.எம் ஸ்ரீ திட்டத்தின் மூலம் புதிய கல்விக் கொள்கையில் இணைய மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது. பி.எம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் உடனே நிதி தருகிறோம் என மத்தியக் கல்வித்துறை தெரிவிக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் தமிழ்நாடு  ஏற்றுக்கொள்ளாது. 

பள்ளிக் கல்வித்துறையில் முன்னேறும் தமிழக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தருகிறது கடந்த ஆண்டுகளில் தமிழக அரசு கோரிய நிதியை விடக் குறைவான நிதியையே மத்திய அரசு கொடுத்திருக்கிறது. மத்திய அரசு நிதி வழங்காதது தமிழக அரசுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறினார்.   

Advertisment
Advertisement

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment