தமிழ்நாட்டில் அரசு பல்கலைக்கழகங்களில் குறித்த நேரத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை பதில் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 19 அரசு பல்கலைக்கழகங்களில் குறித்த நேரத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 990 பட்டதாரிகள் பட்டங்கள் பெற்றுள்ளனர்
தமிழ்நாட்டில் 19 அரசு பல்கலைக்கழகங்களுக்கு அக்டோபர் மாதம் இறுதிக்குள் பட்டமளிப்பு விழா நடத்தியிருப்பது இதுவே முதல்முறை என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழா இனிவரும் ஆண்டுகளில் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்துவதை உறுதி செய்யுமாறு பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தி உள்ளார்.