/indian-express-tamil/media/media_files/CWRfy7PHE2l4JzC80Z4d.jpg)
அரசுப் பேருந்துகளில் பயணிகளுக்கு வசதியாக டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் முறை சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் எஸ்.இ.டி.சி பேருந்துகளில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்கும் முறை நடைமுறைபடுத்தப்பட்டது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் டிக்கெட் பெறும் போது முறைகேடுகளை தவிர்க்கலாம் என்ற வகையில் இந்த முறை கொண்டுவரப்படுவதாக போக்குவரத்து கழகம் கூறியுள்ளது. தற்போது குறிப்பிட்ட பேருந்துகளில் அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கூகுள் பே, போன் பே போன்றவற்றில் மூலம் பணம் செலுத்தி பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்லாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துனர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமான மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் நடத்துநர்களுக்கு பரிசு வழங்கப்படும். நடத்துநர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.